தமிழ்நாடு
மாயமான நெல்சன்..! ஓனரை கண்டதும்.. தோளில் அமர்ந்தான்..! மிஸ்ஸானவன் சிக்கியது எப்படி ?
Apr 17, 2025 03:01 PM
469
மாயமான நெல்சன்..! ஓனரை கண்டதும்.. தோளில் அமர்ந்தான்..!
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மில்கி மிஸ்ட் உரிமையாளர் வீட்டில் இருந்து மாயமான ஆப்ரிக்கன் ரக கிளியை கண்டுபிடித்து தந்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மரம் ஒன்றில் அமர்ந்திருந்த கிளி, உரிமையாளரை கண்டதும் தோளில் சென்று அமர்ந்து கொண்டது
ஏசி காரில்... உரிமையாளரின் தோளில்... ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு பயணிக்கும் இந்த செல்லபிராணி தான் நெல்சன் என்று அன்போடு அழைக்கப்படும் ஆப்பிரிக்கன் கிரேப் பேரட்..!
தமிழகத்தின் பிரபலமான பால் பொருள் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட் உரிமையாளர் சதீஷ். இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு நால்ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் ஆப்பிரிக்கன் கிரேப் பேரட் என்ற சாம்பல் வர்ண கிளியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.
இதற்கு நெல்சன் என்ற பெயர் சூட்டப்பட்ட நிலையில் அந்த கிளி அழகாக பேசி பழகியது.
அண்மையில் இவரது வீட்டில் பெயிண்டிங் பணி நடைபெற்ற போது பெயிண்ட் அடிக்கும் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர் கிளி கூண்டை திறந்து விட்டார்.
பறந்து வெளியே சென்ற கிளி இரண்டு நாளாக காணவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்திய தொழிலதிபர் சதீஷ், இரண்டு நாளாக சாப்பிடாமல் அதனை தேடி வந்ததாக கூறப்படுகின்றது.
கிளியை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களையும் அடித்து ஊர் முழுவதும் விநியோகம் செய்தார்.
இந்த நிலையில் அவரது செல்போன் நம்பருக்கு அழைத்த நபர் ஒருவர், மாரியம்மன் கோயில் அருகில் உள்ள மரத்தின் மேலே நீங்கள் சொன்ன அடையாளங்களுடன் சாம்பல் வர்ண கிளி ஒன்று அமர்ந்திருப்பதாக அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவரது வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மாரியம்மன் கோவிலுக்கு நேரில் சென்ற சதீஷ், அந்த மரத்திற்கு அடியில் நின்று , நெல்சன் என்று கூப்பிட்டதும், அது அழகாக பறந்து வந்து அவர் தோளில் அமர்ந்தது.
தொழிலில் பல நூறுகோடிகள் போட்டு டேர்ன் ஓவர் செய்யும் தொழில் அதிபரான சதீஷ் நினைத்திருந்தால் இதே போல வேறு கிளிகளை விலைக்கு வாங்கி இருக்க முடியும், ஆனால் தன்னுடன் நெருக்காமாக பேசி பழகிய செல்லப்பிராணி ஒன்று காணாமல் போன நிலையில் , அதனை மீட்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் வியக்க வைப்பதாக பறவை நேசர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu