RECENT NEWS

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

முகப்பு

திருடி.. போலீஸை கூப்பிடட்டுமா..? பையன் முன்னாடி மாணவியை அசிங்கப்படுத்தியதால் விபரீதம்..! வெளியானது அதிர்ச்சி ஆடியோ

Apr 18, 2025 07:04 AM

758

திருடி.. போலீஸை கூப்பிடட்டுமா..? பையன் முன்னாடி மாணவியை
அசிங்கப்படுத்தியதால் விபரீதம்..! வெளியானது அதிர்ச்சி ஆடியோ

கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்தது ஏன் ? வெளியானது உடனிருந்த மாணவனின் பகீர் ஆடியோ...

தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் நடத்தப்படும் விதம் பல விதமான கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. இரு பாலர் பயிலும் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பேசக்கூடாது. மீறி பேசினால் தவறாக சித்தரிப்பது. மாணவிகள் மீது அக்கறை காட்டுவதாக நினைத்து கல்லூரி நிர்வாகங்கள் செய்கின்ற கெடுபிடியான நடவடிக்கைகளும், மனதை ரணப்படுத்தும் விதமான ஆபாச பேச்சுக்களும் மாணவ மாணவிகளின் படிப்பில் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது.

மாயமான பர்ஸ் ஒன்றை கண்டுபிடிக்க விசாரிக்கிறேன் என்ற பெயரில் கல்லூரி முதல்வர் செய்த அட்ராசிட்டி ஒரு புறம்... ஆதாரமில்லாமல் அபாண்டமாக போடப்பட்ட திருட்டு பழி மறுபுறம்... இடையில் மாணவியின் நடத்தை குறித்த அவதூறு பேச்சும் சேர்ந்து கொள்ள மாணவி எடுத்த விபரீத முடிவால் அந்த கல்லூரியே அல்லோலபட்டது. தாங்கள் மாணவியை அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று கல்லூரி தரப்பில் மறுப்பு தெரிவித்த நிலையில் கல்லூரியில் நடந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட மாணவியுடன் உடன் இருந்த மாணவன் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி , கல்லூரி முதல்வர் , மாணவியை எப்படி எல்லாம் கேள்விகளால் குத்தி குதறினார் என்று அம்பலப்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள இந்துஸ்தான் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி அனுப்பிரியா. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் செவ்வாய்கிழமை மாலை மருத்துவமனையின் நான்காவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் உடலை மீட்ட போலீசார் , கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே புதன்கிழமை காலை கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை காண ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர்.

உயிரிழந்த அனுப்பிரியாவின் தாய் வானதி மற்றும் சகோதர் குரு பிரசாத் ஆகியோரும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அரசு மருத்துவமனை பிணவறை பகுதிக்கு வந்த அனுபிரியாவின் தாய் கதறி அழுதார்.

மருத்துவமனையில் 1500 ரூபாய் பணம் காணாமல் போய்விட்டதாகவும்,
இதுகுறித்து விசாரணை என்ற பெயரில் அனுப்பிரியாவையும் சக மாணவரையும் அழைத்து விசாரித்த நிலையில் அவர் மாடியில் இருந்து குதித்து விட்டதாக சொல்வதாகவும் மாணவியின் பெற்றொர் தெரிவித்தனர்.

அனுப்பிரியா இறந்த தகவலை கல்லூரி நிர்வாகம் தங்களிடம் தெரிவிக்கவில்லை எனவும், மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று மட்டுமே தெரிவித்ததாகவும், கிளம்பி வரும் வழியில் அவள் இறந்து விட்டதாக கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட வரவில்லை எனவும் விசாரணை மேற்கொண்ட கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் அவருடன் இருந்த ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தினர்.



மருத்துவமனையில் பயிற்சியில் இருக்கும் ஒருவரது பணம் 1500 ரூபாய் காணாமல் போனதற்காக, அங்கு படிக்கும் அனைவரிடமும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் விசாரணை மேற்கொண்டதாகவும்,
அதன்பின்பு அனுப்பிரியாவையும் அவருடன் இருந்த மற்றொரு மாணவரையும் மட்டும் தனியாக அழைத்து கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் விசாரித்ததாகவும் சக மாணவ மாணவியர் தெரிவிக்கின்றனர்.
கல்லூரியில் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மாணவி அனுப்பிரியா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கும் மாணவ, மாணவிகள் பீளமேடு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



தங்கள் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவி உயிரிழந்து 3 மணி நேரத்துக்கு பின்னரும் , முதலுதவி என்ற பெயரில் மருத்துவமனையில் அவரது உடலை மருத்துவமனை நிர்வாகத்தினர் வைத்திருந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவ படிப்பு படிக்கும் தங்களுக்கு இது குறித்த புரிதல் இருக்கும் எனவும், முதலில் ரத்தம் தேவை என சொன்னவர்கள் பின்னர் வேண்டாம் என்று சொன்ன உடனேயே அனுப்பிரியா இறந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டதாக மாணவ,மாணவியர் தெரிவித்தனர்

இறந்த அனுப்பிரியாவின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் அதுவரை இறந்த மாணவியின் உடலை வாங்கப் போவது கிடையாது எனவும் கல்லூரி மாணவ மாணவியர் தெரிவித்தனர். காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி மாணவியின் மரணத்திற்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவ,மாணவியர் தெரிவித்தனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவி அனுப்பிரியாவின் உடலை பெற்றோர் பெற்றுச்சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் மணிமொழி , ஒரு பிரச்சனை என புகார் வரும்போது வழக்கமாக செய்யப்படும் விசாரணை போல் தான் செய்தோம் , நாங்கள் விசாரணை செய்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் இறந்தார் என்பது உண்மை இல்லை என்றார்

இந்த நிலையில் மாணவி அனுப்பிரியாவுடன் விசாரணையை எதிர்கொண்ட மாணவர் ஸ்ரீசரன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் பணத்தை எடுக்கவில்லை என அனுப்பிரியா கூறியும் அதை ஏற்காமல் கல்லூரி முதல்வர் மணிமொழி கடுமையாக பேசினார் என்று மாணவர் தெரிவித்துள்ளார்

கல்லூரியில் என்ன அடிச்சி விளியாடறீங்க ? என்று சிசிடிவியில் பார்த்துவிட்டு சத்தம் போட்டனர், அதே மாதிரி சிசிடிவி பார்த்தால் பணத்தை எடுத்தது யாரென்று தெரிந்துவிடும் என்று மாணவி கூறியதை முதல்வர் ஏற்கவில்லை என்றார்

வீட்டில் பெற்றோரிடம் சொல்லி விடுவதாக தெரிவித்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி அனுப்பிரியா , சற்றும் எதிர்பாராத நிலையில் மாடியில் இருந்து குதித்து விட்டார் என்று மாணவர் கூறி உள்ளார்

பீளமேடு காவல்துறையினர் நேற்று காலை முதல் மாலை வரை காவல் நிலையத்திலேயே அமர வைத்து விட்டதாகவும் மாணவியின் உடலை பார்க்க கூட அனுமதிக்கவில்லை எனவும் மாணவர் வேதனை தெரிவித்தார்

இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருவரை காயப்படுத்த கத்தி எடுத்துதான் குத்த வேண்டும் என்றில்லை, அவதூறான வார்த்தைகள், ஆபாசமான பேச்சுக்கள், அறுவெறுக்கதக்க செயல்கள் போன்றவை கூட அடுத்தவர் மனதை ரணப்படுத்தி விருப்பதகாத செயல்கள் நிகழ காரணமாகிவிடுகின்றது. மாணவ மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை மன தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும். இதற்காக எல்லாம் உயிரை மாய்த்துக் கொள்வது தவறு.

அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் கேள்விகளால் மாணவியை ரணப்படுத்தியதாக புகாருக்குள்ளாகி உள்ள கல்லூரி முதல்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர்.. கொலை மட்டுமல்ல பிறருக்கு மன அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தூண்டுவதும் குற்றம் தான்... குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies