RECENT NEWS

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

முகப்பு

நடிகை பற்றவைத்த நெருப்பு... ஹோட்டலிலிருந்து தப்பி ஓடிய ‘குட் பேட் அக்லி’ வில்லன்... பரபரப்பு CCTV; நடந்தது என்ன?

Apr 18, 2025 08:50 AM

405

நடிகை பற்றவைத்த நெருப்பு... ஹோட்டலிலிருந்து தப்பி ஓடிய
‘குட் பேட் அக்லி’ வில்லன்... பரபரப்பு CCTV; நடந்தது என்ன?

ஹோட்டலிலிருந்து தப்பி ஓடிய "குட் பேட் அக்லி" வில்லன்... பரபரப்பு CCTV; நடிகை புகார்...!

அஜித்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதகளம் செய்து கொண்டிருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’.

கேங்ஸ்டர்களை எல்லாம் விரட்டி விரட்டி வேட்டையாடும் மான்ஸ்டராக வரும் ஏ.கே., தனது மனைவி திரிஷாவிடம் செய்துகொடுத்த சத்தியத்திற்காக சாதுவாக மாறி, 18 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, வெளியே வரும் அவர் தனது மகனைக் காப்பாற்ற மீண்டும் ரெட் ட்ராகனாக மாற ஆரம்பிக்கிறார், ஏ.கே.!

இந்த படத்தில் “அச்சச்சோ அவரா? ரொம்ப பயங்கரமான ஆளேச்சே... அவர்க்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கோங்கப்பா” என்கிற ரேஞ்சுக்கு, ஏ.கேவுக்கு பில்டப் செய்துவிட்டு, எஸ்கேப் ஆகும் கேங்ஸ்டர்களில் ஒருவராக நடித்திருப்பவர்தான், ஷைன் டாம் ஷாக்கோ. இந்தநிலையில்தான், போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார் சோதனையில், இருந்து ஷைன் டாம் ஷாக்கோ நிஜத்தில் தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான வின்சி அலோசியஸ், சமீபத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சியில் “போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்” எனக் கூறியதோடு, அதனைத் தொடர்ந்து அவர் சொன்ன தகவல் கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை பற்றவைத்தது.

அதாவது, வின்சி கூறியது இதுதான், “நான் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, அவர் போதைப் பொருள் பயன்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டார். அவருடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் எனது உடையில் சில சிக்கல் இருந்தது. அதை, சரி செய்ய நான் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த அந்த நடிகர் ‘இதை சரி செய்ய நான் உதவுகிறேன்’ என சொல்லி, என் கூடவே வருவதாக சொன்னார். இதனை அனைவரின் முன்பும் சொன்னதால் எனக்கு சங்கடமாகிவிட்டது.

பின்பு, ஒரு காட்சியின் ரிஹர்சலின்போது அவரது வாயிலிருந்து வெள்ளை கலரில் ஒரு துளி டேபிலில் சிந்தியது. அதைப் பார்க்கையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தொந்தரவாக மாறியது” என கூறினார். இதனால், யார் அந்த நடிகர்? என மேலும் பரபரப்பு ஆனது.

மேலும், அந்த நடிகர் போதையில் தன்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார் எனவும் வின்சி குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்தாராம். ஆனால் இயக்குனரும், தயாரிப்பாளரும் வின்சியிடம் மன்னிப்பு கேட்டதாலும், வேறு வழியின்றி நடித்துக் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. அதாவது, இந்த அத்துமீறல் சம்பவம் வின்சியும் ஷைன்டோம் சாக்கோவும் இணைந்து நடித்த ‘சூத்ரவக்யம்’ ஷுட்டிங்கின்போது நடந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான், நள்ளிரவு கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியிலுள்ள உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் படப்பிடிப்பு சம்பந்தமாக பிரபல சினிமா நடிகர் ஷைன்டோம் சாக்கோ உள்ளிட்ட பிரபலங்கள் தங்கி இருந்தனர்.

அப்போது, போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், அந்த தனியார் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சினிமா நடிகர், ஷைன்டோம் சாக்கோ அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி தப்பித்து ஓடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே நபர், இரண்டு சில நாட்களுக்கு முன், படப்பிடிப்பு தளத்தில் போதை பொருட்கள் பயன்படுத்திக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில்தான், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார் அங்கு ரெய்டு சென்றாதாகவும் இதை அறிந்து அவர் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, ஷைன்டோம் சாக்கோவுடன் தங்கியிருந்த பெண் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, கொச்சியில் உள்ள ஹோட்டலுக்கு 16 ஆம் தேதி புதன்கிழமை காலை 5.30 மணிக்கு ஷைன்டோம் சாக்கோ வந்துள்ளார். பிறகு, சற்று நேரத்தில் அவருடைய பெண் தோழி தனியாக வந்து வேறொரு அறையை புக் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஹோட்டலுக்கு ரெய்டு செய்துள்ளார்கள், என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், சாக்கோ தப்பித்து ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போதை பொருள் பயன்படுத்தியது மற்றும் பாலியல் அத்துமீறல் விவகாரம், கேரளாவில் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது நடிகை வின்சியால் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் யார் என புகார் மூலம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுக்கிறது. அதாவது, நடிகர் ஷைன்டோம் சாக்கோ மீது மலையாள நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபை ஆகிய அமைப்புகளிடம் புகார் அளித்துள்ளார், என கூறப்படுகிறது. இதனால், புகார் கொடுத்த வின்சிக்கு பெண்கள் கூட்டமைப்பான டபள்யூ.சி.சி. அவரது தைரியத்தை பாராட்டி ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்துதான் இப்படியொரு ரெய்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஷைன் டாம் சாக்கோ ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து பின்பு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, 2024 புள்ளிவிவரப்படி 27,701 போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 9,025 வழக்குகளைவிட அதிகம் என கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவின் போதைப்பொருள் மையமாக விளங்கும் பஞ்சாப்பை முந்திவிட்டது கேரளா, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல்.

அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் 87,101 போதை பொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, முந்தைய ஆண்டுகளைவிட 130 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இரண்டு மாதங்களில் 30 கொலைகள் போதைப்பொருள் தொடர்பானவை எனவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 வரை மட்டுமே 2,854 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது, கேரள காவல்துறை.

இந்தநிலையில், கேரள நடிகை பற்றவைத்த நெருப்பு, தப்பியோடிய நடிகர் என கேரள திரையுலகத்தில் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது, போதைப் பொருள் மற்றும் பாலியல் அத்துமீறல் விவகாரம்!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies