BIG STORIES
இப்ப இவங்க காலம்.. ஷட்டர் லிப்டிங் கொள்ளையர்கள்..! வியாபாரிகளே உஷார்
Apr 19, 2025 01:17 AM
314
பூட்டை உடைக்காமல் இரும்பு சட்டரை வெறும் கைகளால் மேலே தூக்கி வளைத்து கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் திருவண்ணாமலை மற்றும் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஷட்டர் லிப்டிங் கொள்ளையர்கள்.... இந்த கும்பலுக்கு கையே கத்தி மாதிரி.. அதுதான் ஷட்டர் பூட்டுக்களை உடைக்காமல் கையால் ஷட்டரை இழுத்து வளைத்து தூக்கி கடைக்குள் எளிதாக புகுந்து விடுகின்றது..!
விழுப்புரத்தைச் சார்ந்தவர் ரஞ்சித் சிங் . இவர் திண்டிவனம் ரொட்டிக் கார தெருவில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகின்றார் . இந்த கடையில் இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் .
சம்பவத்தன்று இரவு கடை ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்படாமல் ஷட்டர் மட்டும் வளைத்து தூக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .
உள்ளே கல்லா பெட்டியில் வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த திண்டிவனம் போலீசார் , அந்தப்பகுதியில் பொறுத்தி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பூட்டை உடைக்காமல் எப்படி ஹட்டரை தூக்கி இருக்க முடியும், கடப்பாறை போன்ற கம்பியை பயன்படுத்தி தூக்கி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.
இதே போல திருவண்ணாமலை , அவலூர்பேட்டை சாலையில் உள்ள பிரபலபான அன்னை பாத்திர கடையில் அதிகாலை 4 மணியளவில் ஷட்டரை 4 பேர் ஒன்றாக சேர்ந்து கைகளால் மேலே தூக்கி வளைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையிலிருந்து ரூபாய் 20 ஆயிரத்தை திருடி சென்றனர்.
அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் நீண்ட நேரம் நோட்டமிட்டு அந்த கடை வாசலில் அமர்ந்திருந்து ஷட்டரை வளைத்து உள்ளே புகுந்தனர்
வாயில் டார்ச் லைட்டை கவ்வியபடி உள்ளே சென்று ஒருவன் வேக வேகமாக கல்லாப்பெட்டியை ஸ்குரு டிரைவரால் உடைத்தான். மற்றொருவன் பணத்தை அள்ளி பைக்குள் திணித்தான்
20 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்த கடையின் உரிமையாளர், நல்ல வேளை, கடைக்குள் பெரிய அளவில் பணம் வைத்து செல்லல்லை என்று ஆறுதல் பட்டுக் கொண்டார்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் புது விதமாக கொள்ளையில் ஈடுபட்ட அந்த 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விவரித்த போலீசார் கடைகளில் போடப்பட்டிருக்கும் இரும்பு ஷட்டர்களில் 3 இடங்களில் பூட்டு போடுவதற்கு வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் இரு புறம் மட்டுமே பூட்டு போட்டு செல்கின்றனர்.
மேலும் இரும்பு ஷட்டர்கள் எளிதாக வளையும் தன்மையுள்ள மெலிதான தகர ஷீட்டு போல இருந்ததால், கையால் இழுத்தவுடன் வளைந்து, கொள்ளையர்கள் எளிதாக உள்ளே செல்வதற்கு காரணமாக அமைந்தது.
மேலும் நடுப்பகுதியிலும் தரையுடன் சேர்த்து பூட்டு போட்டிருந்தால் இப்படி எளிதாக பிடித்து மேலே தூக்கி வளைத்து கடைக்குள் நுழைந்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் கையில் சிறு ஸ்குரூடிரவருடன் டிப் டாப் உடை அணிந்து கொண்டு வலம் வரும் இந்த கொள்ளையர்களின் கைவரிசை தங்கள் பகுதிக்கு புதிது என்றும் வியாபாரிகள் சிரமம் பார்க்காமல் தங்கள் கடையில் ஷட்டர்களில் 3 அல்லது 4 இடத்தில் பூட்டும் வகையில் தயார் செய்யவும், கடைகளில் தெளிவாக முகம் தெரியும் வகையிலான தரமான சிசிடிவி கேமராக்களை பொறுத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒரே நாளில் திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ள ஷட்டர் லிப்டிங் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வியாபரிகள் உஷாராக ஷட்டர்களுக்கு கூடுதல் பூட்டு போட்டால் தங்கள் கடைகளில் களவு போவதை தடுக்க இயலும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu