RECENT NEWS

விதிகளை மீறி ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் படுகாயம்

விதிகளை மீறி ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் படுகாயம்

Apr 22, 2025

விதிகளை மீறி ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் படுகாயம்

விதிகளை மீறி ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் படுகாயம்

Apr 22, 2025

BIG STORIES

தங்கைக்கு அண்ணன் கொடுத்த சொத்து மனைவி செய்த விபரீதம் Ex DGP-க்கு நேர்ந்தது என்ன..?

Apr 21, 2025 08:33 AM

507

தங்கைக்கு அண்ணன் கொடுத்த சொத்து மனைவி செய்த விபரீதம் Ex DGP-க்கு நேர்ந்தது என்ன..?

தங்கைக்கு அண்ணன் கொடுத்த சொத்து மனைவி செய்த விபரீதம் Ex DGP-க்கு நேர்ந்தது என்ன..?

பெங்களூருவில் ஓய்வு பெற்ற டிஜிபி ஓம்பிரகாஷ் தனது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

 கர்நாடகாவில் டி.ஜி.பியாக பொறுப்பு வகித்த இவர் தனது சொந்த வீட்டிலேயே கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பீஹார் மாநிலம் சம்பாரண் மாவட்டத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ், கடந்த 1981 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் உதவி கமிஷனராக பணியை துவங்கிய இவர் 2015 ஆம் ஆண்டில் டி.ஜி.பி பதவியில் நியமிக்கப்பட்டு, ஓராண்டில் பணி ஓய்வுப் பெற்றார்.

பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே- அவுட்டில் 2 மாடிகள் கொண்ட சொந்த வீட்டில், மனைவி பல்லவியுடன் கீழ் தளத்தில் ஓம்பிரகாஷ் வசித்து வந்தார். அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்தோடு முதல், இரண்டாவது தளத்தில் வசித்து வருகின்றனர்.

ஞாயிறு மாலையில் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய பல்லவி, ஓம்பிரகாஷ் இறந்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்தார்.

போலீஸார் அங்கு சென்ற போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால் நீண்ட நேரமாக தட்டிய பின் கதவை பல்லவி திறந்துள்ளார். உள்ளே, ரத்தவெள்ளத்தில் ஓம்பிரகாஷ் சடலமாக கிடந்த நிலையில், கணவரை கொன்று விட்டதாக பல்லவி கூறியுள்ளார். பல்லவியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஓம்பிரகாஷ் உத்தர கன்னடாவில் வேலை செய்த போது, தண்டேலியில் தனது தங்கைகள் பெயரில் நிலம் வாங்கி உள்ளார். மனைவி, மகன், மகள் பெயரிலும் சொத்து வாங்கி இருந்த ஓம்பிரகாஷ், தங்கைகளுக்கு வாங்கிக் கொடுத்த நிலத்தை பற்றி பேசக்கூடாது என்று பல்லவியிடம் கூறியுள்ளார். ஆனாலும், கடந்த 15 ஆண்டுகளாக இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும், நிலப்பிரச்னை தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் கணவனை 10-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பல்லவி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடும்பத்தினர் உள்ள, 'வாட்ஸ் அப்' குழுவில், பல்லவி பகிர்ந்திருந்த ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. அதில், 'ஓம்பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுகிறார். எந்த நேரத்திலும் என்னை கொல்ல வாய்ப்பு உள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.

ஓம்பிரகாஷை கொன்ற பின், ஓய்வு பெற்ற இன்னொரு ஐ.பி.எஸ்., அதிகாரியின் மனைவியிடம் வீடியோ காலில் பேசிய பல்லவி, 'அந்த அரக்கனை கொன்று விட்டேன்' என்று கூறிய தகவலும் வெளியாகி உள்ளது. எனவே, முன்னாள் டிஜிபி ஓம்பிரகாஷ் கொலைக்கு சொத்து பிரச்னை மட்டும் தான் காரணமா, வேறு எதுவும் பிரச்னையா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies