முகப்பு
ஷாருகான் உணவகத்தில் கலப்படமா? ரெய்டு விட்ட யூடியூபர்... என்ன பதான் இது?
Apr 21, 2025 04:17 PM
197
ஷாருகான் உணவகத்தில் கலப்படமா? ரெய்டு விட்ட யூடியூபர்... என்ன பதான் இது?
திரை பிரபலங்கள் தாங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், தங்கள் சொந்த தொழிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் சிலர் தங்கள் பணத்தை ஷேர் மார்கெட், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடும் செய்கின்றனர். அப்படி தலைநகர் டெல்லி மற்றும் மும்பை உட்பட பல இடங்களில் ஆடம்பர ஹோட்டல்களை வைத்திருப்போர் பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்களாகவே இருக்கின்றனர்.
குறிப்பாக மும்பையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து அந்தேரி பகுதியில் நடிகர் ஒருவரின் பங்களாவை வாடகைக்கு எடுத்து ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இதே போன்று ஷில்பா ஷெட்டி, ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகை ரகுல் ப்ரீத் சிங், சன்னி லியோன், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், நடிகர் பாபிதியோல் ஆகியோரும் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் நடத்தி வரும் ‘டோரி’ உணவகத்தில் போலி பன்னீர் பரிமாறப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்தக் சச்சிதேவ் என்ற யூடியூபர் ஒருவர், பிரபல ரெஸ்டாரண்ட்களுக்கு சென்று, உணவின் தரம் பற்றி தெரிந்து கொள்ள, அங்கு சென்று சாப்பிட்டு சோதனையும் செய்து வருகிறார்.
அப்படி சமீபத்தில், மும்பை பாந்த்ராவில் உள்ள ஷாருக்கான் மனைவி கௌரி கான் நடத்தும் டோரி என்ற உணவகத்திற்கு சென்ற சச்சிதேவ், அங்குள்ள உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார். அப்போது அந்த உணவகத்தில் போலி பன்னீர் பரிமாறப்பட்டதாக யூடியூபர் சச்தேவ் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் ‘இந்த உணவகத்தில் பரிமாறப்படும் பன்னீரில் ஸ்டார்ச் உள்ளது என்றும், இது போலியான பன்னீர் என்று கூறிய அவர், அதனை அயோடின் டின்ஜர் ஆய்வுக்கு உட்படுத்திய போது அவை போலியான பன்னீர் என்பது உறுதியாகி இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதன் தொடர்ச்சியாக மும்பையில் உள்ள மற்ற நட்சத்திரங்களின் உணவகங்களில் நடத்திய சோதனையில் இது போன்ற மாற்றம் ஏற்பட்டதில்லை என்றும் அந்த யூடியூபர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஷாருக்கான் மனைவியின் ‘டோரி’ உணவகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “அயோடின் சோதனை, பன்னீரின் நம்பகத்தன்மையை அல்ல, ஸ்டார்ச் இருப்பதையே பிரதிபலிக்கிறது. உணவில் சோயா சார்ந்த பொருட்கள் இருப்பதால், அதன் பிரதிபலிப்பாக பனீர் கருப்பு கலராக மாறியிருக்கலாம். நாங்கள் சுத்தமான பனீரையே பயன்படுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu