BIG STORIES
ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?
Apr 22, 2025 01:32 AM
91
ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?
ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இசையமைப்பவரின் பாட்டுக்கு திரையரங்கில் கைதட்டு விழவில்லை என்றும் தங்களின் பழைய பாட்டுக்கு கைதட்டுகள் விழுவதால் ராயல்டி கேட்பதில் தவறில்லை என்று இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பேசி உள்ளார்
அஜீத்தின் குட் பேட் அக்லி படத்தில் தனது இசையமைப்பில் உருவான பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பதால தனக்கு 5 கோடி ரூபாய் ராயல்டி கேட்டு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பாடல்களும் முறையான ரைட்ஸ் வைத்திருக்கும் ஆடியோ நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாடல்களுக்கான உரிமையை ஆடியோ நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்கு விற்று கோடிகளை பெற்றுக் கொண்ட இளையராஜா, எப்படி அந்த பாடலை பயன்படுத்திய தயாரிப்பாளரிடம் மீண்டும் பணம் கேட்க முடியும்? ஒரு பொருளை விற்று விட்டு அந்த பொருளுக்கு உரிமை கொண்டாடுவது சரியா ? என்று அஜீத் ரசிகர்கள் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற World International Tamil Film Association வழங்கும் முதலாவது மாநாட்டில் பங்கேற்று பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் , தனது சகோதரர் இளையராஜா எதற்காக ராயல்ட்டி கேட்கிறார் என்பதற்கு விளக்கம் அளித்தார் .
7 கோடி ரூபாய் வாங்கிட்டு படத்துக்கு மியூசிக் போடுறான், அவன் பாட்டு ஹிட்டாகல, சொர்க்கமே என்றாலும்... என்று எங்க பாட்ட போட்டவுடனே ரசிகர்கள் விசில் அடிக்கிறார்கள், கைத்தட்டுகிறார்கள் ... என்று யார் என்றார் கங்கை அமரன்
அத்தோடு நிற்காமல் பொட்டு வச்ச தங்க குடம் பாடலை போட்டவுடன் திரையரங்கே கொண்டாட்டமாக மாறியது என்ற கங்கை அமரன் , ஏன் ஜோடி மஞ்ச குருவி பாடல் தான் எழுதியது என்பதையும் சுட்டிக்காட்டினார்
பணம் எங்களுக்கு பெரிய விஷயமில்லை, கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கு, முறையாக அண்ணனை சந்தித்து அனுமதி கேட்டிருந்தால் பணம் வாங்காமல் அவரே பயன்படுத்த சொல்லி இருப்பார், என்று நோட்டீஸ் அனுப்பியதற்கான காரணத்தையும் விவரித்தார் கங்கை அமரன்
இளையராஜா பாடல்களை மேடையில் பாடினாலே ரைட்ஸ் வாங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் பிரச்சனை உருவானபோது , தான் சத்தம் போட்டு அது தவறு என்று சுட்டிக்காட்டியதாகவும் கங்கை அமரன் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu