பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
ஜாதி வெறி இயக்குனராக முத்திரை குத்தப்பட்டவர் திடீர் உயிரிழப்பு பின்னணி..! “மண் மணம் மாறா படைப்பாளன் மரணம்”
Jun 03, 2025 05:21 AM
213
ஜாதி வெறி இயக்குனராக முத்திரை குத்தப்பட்டவர் திடீர் உயிரிழப்பு பின்னணி..!
தமிழ் திரையுலகில் மதயானை கூட்டம் போன்ற மண்மணம் மாறாத படைப்பை தந்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன்..!
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த விக்ரம் சுகுமாறன், ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் , அவருக்கு பின் வெற்றி மாறனிடம் இணைந்தார்.
ஆடுகளம் படத்துக்கு திரைக்கதை வடிமைப்பிலும், வசனத்திலும் உறுதுணையாக இருந்தவர் விக்ரம் சுகுமாரன். “நாங்க சுனாமிலேயே சுமிங்க போடுரவய்ங்க..” உள்ளிட்ட மதுரை வட்டார மொழியில் பல வசனங்களை எழுதி இருந்தார்
மாயாண்டி குடும்பத்தார், கொடி வீரன் உள்ளிட்ட படங்களில் வில்லதனம் கலந்த குணச்சித்திர வேடங்களிலும் பரிணமித்தவர் விக்ரம் சுகுமாறன்
அவரது இயக்கத்தில் வெளியான மதயானைக்கூட்டம் படம் முழுக்க முழுக்க ஒரே சாதிக்குள் நடக்கின்ற மண் மணமும், போர்க் குணமும் மாறாத உருக்கமான கதை என்றாலும் படம் வெளியானதும் அதனை சாதி பெருமை பேசுகிற படமாக முத்திரை குத்தி சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட அந்த படம் பெருவாரியான மக்களை சென்றடையாமல் போய்விட்டது.
அந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து 'இராவண கோட்டம்' திரைப்படத்தை இயக்கினார் விக்ரம் சுகுமாறன் அப்படமும் பெரிதாக கவனம் பெறவில்லை. மாறாக கடுமையான விமர்சனத்தை எதிர் கொண்டது.
அந்தப் படத்திற்கான நேர்காணலில், தன் மீது சாதிய முத்திரை குத்தப்படுவதாக வேதனை தெரிவித்த விக்ரம் சுகுமாரன். தனக்கு ஒரு நடிகர் துரோகம் செய்துவிட்டதாகவும் அப்போது தன் முக நூலில் பதிவிட்டிருந்தார்.
அதில், "மதயானைக் கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன்.
ஆனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன். பச்சை துரோகி... கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டிருக்கிறான்.
முதுகில் குத்திவிட்டான். இதைக் கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை" எனக் கூறி இருந்தார். விக்ரம் சுகுமாரனின் அந்தப் பதிவு யார் அந்த துரோகி ? என்று அப்போது பேசு பொருளானது.
இப்படி நீண்ட நாட்களாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த விக்ரம் சுகுமாறன், சம்பவத்தன்று மதுரைக்கு சென்று புதிய படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிவிட்டு பேருந்தில் சென்னை திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடல் அஞ்சலிக்காக செங்குன்றம் அடுத்த பம்மதுகுளத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் சுகுமாறனின் உடலுக்கு அஞ்சலில் செலுத்திய இயக்குனர் வெற்றிமாறன் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்
பைட்(())
ராவணக் கோட்டம் படத்தில் நடித்த சாந்தனு, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலில் செலுத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu