RECENT NEWS

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

முகப்பு

இழுத்து வரப்பட்ட குழந்தைகள்..! பங்களா வீட்டில் இருந்து வீதிக்கு வந்த குடும்பம்..! தடையை மீறி ஜப்தி என புகார்..

Jun 03, 2025 06:19 AM

806

இழுத்து வரப்பட்ட குழந்தைகள்..! பங்களா வீட்டில் இருந்து வீதிக்கு வந்த குடும்பம்..! தடையை மீறி ஜப்தி என புகார்..

இழுத்து வரப்பட்ட குழந்தைகள்..! பங்களா வீட்டில் இருந்து வீதிக்கு வந்த குடும்பம்..!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கடன் பெற்றவர் உயிரிழந்ததால், வங்கி கடனுக்கு அடமானமாக வைத்த கடை மற்றும் பங்களா வீட்டை , சோழமண்டலம் நிதி நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவு பெற்று ஜப்தி செய்த நிலையில் தடையை மீறி ஜப்தி செய்ததாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

நல்லா வாழ்ந்தவங்க கெட்டுபோகக்கூடாது என்பார்கள்.. அப்படி அரண்மனை போன்ற வீட்டில் செழிப்பாக வாழ்ந்த தொழில் முனைவோர் குடும்பத்தில் முக்கிய நபர் விபத்தில் பலியானதால், தொழில் கடன் கொடுத்த சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவு பெற்று, தங்களிடம் அடமானமாக வைத்த வீட்டை ஜப்தி செய்த பரபரப்பான காட்சிகள் தான் இவை..!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்.

தொழிலதிபரான இவர் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் சோழமண்டலம் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழில் கடனாக 1 கோடியே 70 லட்சம் ருபாய் வாங்கி உள்ளார்.

அதற்கு அடமானமாக வீடு அமைந்திருக்கும் இடத்தின் ஆவணம் மற்றும் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் உள்ள கடையின் ஆவணங்களை கொடுத்துள்ளார்.

அதே ஆண்டு வாகன விபத்து ஒன்றில் சிக்கி முருகன் உயிரிழந்தார்.

இதனையடுத்து வாங்கிய கடனுக்கு முறையாக தவணை தொகையை சரியாக செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று வருட வட்டி சேர்த்து 2கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டி இருந்துள்ளது.

முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்த வில்லை என்பதை சுட்டிக்காட்டி நிதி நிறுவனம் தரப்பில், சர்பாஸி சட்டப்பிரிவின் கீழ் கடனை வசூல் செய்ய நீதிமன்றத்தை நாடி 2023 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

வழக்கு நாகர்கோவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் , முருகன் கடன் பெறுவதற்காக நிதி நிறுவனத்திடம் செலுத்திய ஆவணங்களுக்கு சொந்தமான இடங்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

அதன்படி வங்கி அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன், முதலில் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் இருந்த எலக்ட்ரிக்கல் கடைக்கு சீல் வைத்தனர், தொடர்ந்து கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள முருகனின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அந்த பங்களா வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்

வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே செல்ல மறுத்து பெண்களும் சிறுவர்களும் அடம்பிடித்த நிலையில் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கியும், இழுத்துச்சென்றும் போலீசார் துணையுடன் வெளியேற்றினர்

அடுத்தடுத்து அனைவரையும் வெளியேற்றி போலீசார் நீதிமன்ற உத்தரவை நிரைவேற்ற துணை நின்றனர்

அரண்மனை போன்ற அந்த பங்களாவில் வசித்து வந்த பெண்கள், ஒரே நாளில் தாங்கள் அணிந்திருந்த துணியுடன் நிராதரவாக வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்து ஜப்தி உத்தரவு பெற்று வீட்டையும் கடையையும் ஜப்தி செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட முருகனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதனை மனுவாக எழுதிக் கொண்டு முருகனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர்

கடன் பெற்ற தனது கணவர் முருகன் விபத்தில் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய மனைவி உமா மகேஸ்வரி, வீட்டுக்கடனுக்கு இன்சூரன்ஸ் இருப்பதால் தனது வீட்டை ஜப்தி செய்யாமல் இருக்க உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்று வழக்கை நடத்தி வந்ததாக கூரப்படுகின்றது.

இதனை மறைத்து செசன்ஸு நீதிமன்றத்தில் ஜப்தி உத்தரவு பெற்று வந்த நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அத்துமீறி வீட்டின் உள்ளே புகுந்து அவதூறாக பேசியதுடன் வீட்டில் இருந்த சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளியதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பூட்டிய வீட்டையும்,கடையையும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies