RECENT NEWS

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

Jun 06, 2025

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

Jun 06, 2025

BIG STORIES

இது தான்.. ரியல் “தக் லைப்” நீதிபதியை திகைக்க வைத்த கமல்ஹாசன் விளக்க அறிக்கை ..! இதுல மன்னிப்பு எங்க இருக்கு...?

Jun 03, 2025 03:42 PM

167

இது தான்.. ரியல்  “தக் லைப்” நீதிபதியை திகைக்க வைத்த கமல்ஹாசன் விளக்க அறிக்கை ..! இதுல மன்னிப்பு எங்க இருக்கு...?

இது தான்.. ரியல் “தக் லைப்” நீதிபதியை திகைக்க வைத்த கமல்ஹாசன் விளக்க அறிக்கை ..! இதுல மன்னிப்பு எங்க இருக்கு...?

சென்னையில் நடந்த தக் லைப் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை புகழ்வதற்காக, தமிழில் இருந்து பிரிந்தது தான் கன்னடம், நாமெல்லாம் ஒரே குடும்பம் என்ற ரீதியில் கமல் ஹாசன் பேசிய இந்த பேச்சு தான் சர்ச்சையாக மாறியது.

கமல் கன்னட மொழியை அவமதித்து விட்டதாக கூறி கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்

கன்னட திரைப்பட வர்த்தக சபையும் கமல் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் அவரது தக் லைப் திரைப்படம் வெளியாகும் என்று போர்க்கொடி உயர்த்தினர்

தக் லைப் படம் வருகிற 5ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட அனுமதிக்க கோரி , தயாரிப்பாளரான கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை விசாரித்த அந்த மாநில உயர் நீதிமன்ற நீதிபதி , தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள் ? நீங்கள் வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் வல்லுனரா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்

கமல் ஹாசன் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பும், அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்றும் கமல் மன்னிப்பு கேட்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று கூறி அதற்கு சில மணி நேரங்களை கெடுவாகவும் விதித்தது

மீண்டும் இந்த வழக்கு மதியம் 2;30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கமல் ஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தகசபைக்கு தனது பாணியில் எழுதி இருந்த விளக்க கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கன்னட மொழி மீதான எனது காதலை வெளிப்படுத்தி தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும், தமிழும் , கன்னடமும் ஒரே குடும்பம் என்பதை வெளிப்படுத்தவே அப்படி பேசினேன், கன்னட மொழியை சிறுமைப்படுத்த வேண்டும் என்று பேசவில்லை என்று கமல் தெரிவித்திருந்தார். தனது பேச்சால் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்துக்கு வருந்துகிறேன் என்று தெரிவித்த கமல், பதற்றத்தை ஏற்படுத்தவோ, சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதற்காகவோ அப்படி பேசவில்லை என்று கன்னட மொழி மீதான காதலை விளக்கி இருந்தார்.

இதனை படித்து பார்த்த உயர் நீதிமன்ற நீதி பதிகள், கமல்ஹாசன் கன்னட மொழியை மதிப்பதாக கூறுவதை ஏற்கிறோம், சுற்றி வளைத்து கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையை கண்டு திகைத்து போன நீதிபதி, ஒரு இடத்தில் கூட மன்னிப்பு என்ற வார்த்தையே வர வில்லையே ? என்றும் மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ வேண்டி இருக்கின்றது ? என்றும் கேள்வி எழுப்பினர். தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்கலாம், தவறாக புரிந்து கொள்ளபட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது? என்று கமலஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்ததோடு, கர்நாடகாவில் தக்லைப் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைப்பதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூன் 10 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies