முகப்பு
வீச்சரிவாள் ரவுடி அட்டகாசம்.. கைப்பெண்ணிடம் அத்துமீறி ரூ.10 லட்சம் பறித்த கொடுமை..! பெண் காவல் ஆய்வாளர் மீதும் புகார்
Jun 04, 2025 01:20 AM
95
வீச்சரிவாள் ரவுடி அட்டகாசம்.. கைப்பெண்ணிடம் அத்துமீறி ரூ.10 லட்சம் பறித்த கொடுமை..!
பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி... 10 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த வீச்சரிவாள் ரவுடி... பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த பின்னரும் ரவுடி மீது கைது நடவடிக்கை எடுக்காமல் அபலை பெண் அலைகழிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தமிழக டிஜிபி அலுவலகத்திலும் மற்றும் மனித உரிமை ஆணையத்திலும் இளம் பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோவை வைத்து மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் பறித்தது எப்படி ?
பிளாக்மெயில் ஆண் நண்பருக்கு காவல் ஆய்வாளர் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உண்மையா ?
தூத்துக்குடியில் 8 வயது மகளுடன் வசிக்கின்ற அந்த கைம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என்ன ? என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் கணவனை இழந்து தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அஜித்குமார் என்ற நபர் அந்த பெண்ணுடன் நண்பராக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு அஜித் குமார் தனக்கு பிறந்தநாள் என அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அப்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் அவன் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதால் அதனை வெளியில் சொல்ல பயந்து, அவன் சொன்னபடி எல்லாம் செய்ததாக அந்த பெண் தெரிவித்தார். அவனுக்கு பயந்து கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை ஜிபே மூலமும், 6 சவரன் நகைகளை அடகு வைத்தும் அவனிடம் பறிகொடுத்ததாக ஆதாரங்களை வெளியிட்டு வேதனை தெரிவித்தார் அந்த அபலைப் பெண்
தனக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், கையில் பணம் ஏதும் இல்லாததால், அஜீத்குமாரின் பிளாக்மெயிலுக்கு அந்த பெண் ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று அஜீத்குமார் கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 14 ந்தேதி அஜித்குமார் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் அஜித் குமார் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டிய அந்த பெண் . ரவுடி போல வீச்சரிவாளை வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அஜித் குமாரை ஆயுத தடுப்பு சட்டத்தில் மட்டும் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறினார்
காவல் ஆய்வாளர் உட்பட சில காவல்துறையினர் அஜித்குமாருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் உடனடியாக அஜித் குமாரை பலாத்கார வழக்கில் கைது செய்து அவனது செல்போனில் உள்ள தனது ஆபாச வீடியோக்களை கைப்பற்றி அழிக்க வேண்டும் எனவும் தனது குழந்தையின் எதிர்காலம் கருதி தனக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்
கணவனை இழந்த பெண்களாக இருந்தாலும் சரி, கணவனை பிரிந்து வாழும் பெண்களாக இருந்தாலும் சரி தங்களிடம் அன்பாக பழகக்கூடிய ஆண் நண்பர்களை நம்பி நகைப்பணம் கொடுப்பது, அவசரத்துக்கு உதவி செய்வது அவர்கள் தரும் உணவை சாப்பிடுவது, அழைக்கும் இடத்திற்கு செல்வது போன்றவற்றை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது. இப்படிப்பட்ட ஆசாமிகள் மீது நம்பிக்கை வைத்து செய்யும் சில செயல்கள் அபலை பெண்களின் எதிர்காலத்திற்கே வேட்டு வைப்பதாக அமைந்து விடுகின்றது.
அந்த வகையில் ஆண் நண்பரை நம்பி பிறந்த நாள் கொண்டாட சென்ற இடத்தில், மயக்க மருத்து கலந்த குளிர்பானம் அருந்தியதால் தனது வாழ்க்கையையும், வாழ நாள் சேமிப்பையும் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த இளம் பெண். காவல் துறையினர் இரும்புக்கர நடவடிக்கை மேற்கொண்டு அஜீத்குமார் மற்றும் அவனுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
அதே நேரத்தில் தனியாக இருக்கின்ற பெண்ணை சீண்டினால் உதவிக்கு எவரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் சிலர் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் வழக்கு பெருங்குற்றம்... அதற்கு அண்மைகால நீதிமன்ற தீர்ப்புகளே சாட்சி... பெண்கள் மீது கைவைத்தால்.. ஆயுளுக்கும் வெளியில் வர இயலாது... அந்த அளவிற்கு அது பெருங்குற்றம்... அத்துமீறும் ஆசாமிகளுக்கு அந்த குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu