முகப்பு
“சுவர் இல்லா சித்திரங்கள்” காதல் கசந்ததால் விபரீதம்.. குடும்பம் நடத்த முடியலையாம்..! “எம்புள்ள வாழ்க்கை போச்சே...” தாய் உருக்கம்
Jun 04, 2025 01:29 AM
206
காதல் கசந்ததால் விபரீதம்.. குடும்பம் நடத்த முடியலையாம்..!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி காதல் ஜோடி ஒன்று , வேலைக்கு செல்வதாக கூறி பெற்றோரை ஏமாற்றி விட்டு, சென்னைக்கு வந்து தகர குடிசை வீட்டில் குடித்தனம் நடத்திய நிலையில் காதல் கசந்ததால் காதலியை கொலை செய்து விட்டு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் - விஜயலெட்சுமி தம்பதியினரின் மகன் ஆகாஷ் . இவர் விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அதே கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அபிநயாவுடன் காதல் மலர்ந்தது
கல்லூரியில் செமஸ்டர் விடுமுறை விடப்பட்ட நிலையில் வேலைக்கு செல்வதாக அபிநயா வீட்டில் தெரிவித்து விட்டு வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அதே போல ஆகாஷூம் கூறிவிட்டு தனது காதலியுடன் சென்னை வந்துள்ளார்
இருவரும் சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் குடிசை பகுதியில் தகரத்தால் வேயப்பட சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். புதிதாக திருமணம் முடிந்த கணவன் - மனைவி எனக்கூறி 4000 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகை செலுத்தியும், 1400 ரூபாய் மாத வாடகைக்கு அந்த சிறிய வீட்டில் குடியேறினர்.
இருவரும் இரவு பகல் என எப்போதும் அந்த சிறிய வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துள்ளனர். கையிலிருந்த பணமெல்லாம் காலியான நிலையில் சம்பவத்தன்று பகலில் ஆகாஷும், அபி நயாவும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது. இரவு 8 மணியளவில் இருவரின் சத்தமும் அடங்கிய நிலையில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டி பார்த்துள்ளார்
ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு மிரண்டு போன அவர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ICF போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அபிநயா கண் மற்றும் வாயில் ரத்த காயங்களுடனும் வாயில் நுரை தள்ளியவாறும் தரையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. கையில் வெட்டுகாயங்களும் இருந்தது.
கைரேகை நிபுணர்கள் தடவியல் துறையினர் வந்து வீட்டில் சோதனை செய்து ரத்தம் படிந்து கிடந்த செங்கல் ஒன்றை கைப்பற்றி தடவியல் சோதனைக்கு எடுத்து சென்றனர். இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக KMC அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவர் ஆகாஷின் அண்ணன் ஹரிதாஸ் சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், ஊரை விட்டு சென்ன்னை வந்த கல்லூரி காதல் ஜோடி இருவரையும், கணவன மனைவி எனக்கூறி இருவருக்கும் தங்குவதற்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது. சம்பவத்தன்று காலை காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டதும், ஆத்திரமடைந்த ஆகாஷ் அபிநயாவை அடித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விவசாயம் பார்த்து தனது மகளை படிக்க வைத்தாகவும், வக்கீலுக்கு படித்து தங்களை காப்பாற்றுவாள் என நினைத்தாகவும் ஆனால் இப்படி காதலனை நம்பி வந்து கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் என்று அபிநயாவின் தாய் கதறி அழுதார்.
கல்லூரியில் சில ஆண்டுகளாக ஜாலியாக ஊர் சுற்றிய காதல் ஜோடி, நெருக்கத்தை இறுக்கமாக்க சேர்ந்து வாழ்ந்த 1 வாரத்திலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும், சிறிய வீட்டில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க முடியாமல் ஒருவருக்கு ஒருவர் குறைக்கூறிகொண்டு சண்டையிட்டதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu