RECENT NEWS

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

Jun 06, 2025

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

Jun 06, 2025

முகப்பு

"RCB ஜெயிச்சுருச்சு"... தவம்டா..கோலிடா..கப்புடா..! 'ஐயோ..எஸ்.ஐ சார்' மொமெண்ட்.. நள்ளிரவில் 'ஜாம்பிகள்' அலப்பறை..

Jun 04, 2025 03:02 PM

71

"RCB  ஜெயிச்சுருச்சு"... தவம்டா..கோலிடா..கப்புடா..!  'ஐயோ..எஸ்.ஐ சார்' மொமெண்ட்.. நள்ளிரவில் 'ஜாம்பிகள்' அலப்பறை..

ஐ.பி.எல் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக RCB அணி கோப்பையை வெல்லாததால் 'ஆர்.சி.பி ஐ.பி.எலின் குருசாமி' என ஏராளமான கேலி, கிண்டல்களை அந்த அணியும் ரசிகர்களும் சந்தித்து வந்தனர். இந்நிலையில் 18வது வருடம் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஆர்.சி.பி அணி போட்டியை வென்றதோடு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.

இதனை ஆர்.சி.பி ரசிகர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடி வந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் குவிந்த ஆர்.சி.பி ரசிகர்கள் மேளம் இசைத்தும், டான்ஸ் ஆடிம் கொண்டாடினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நள்ளிரவில், ஆர்.சி.பி வெற்றியை கொண்டாடுவதாக கூறி
பைக்கில் 3 நபர்களாக போக்குவரத்து விதிகளை மீறி வட்டமடித்ததுடன், ஆர்வ கோளாறில் கால்களை பைக்கின் ஹேண்ட் பாரில் வைத்துக்கொண்டு வித்தை காட்டி வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை வழி மறித்து சாலையில் பட்டாசு வெடித்து அலப்பறை செய்துள்ளனர். அப்போது பேருந்தை ஒருவர் தட்டி "ஆர்.சி.பி" என கத்த பேருந்தின் ஓட்டுநர் கடுப்பாகி கத்தியுள்ளார்.

இன்னொரு பக்கம் பாலத்தின் மேல் நடுரோட்டில் குரங்கு தாவுவதை போல அங்கும் இங்கும் குட்டிக்கரணம் அடித்து எல்லாம் ஆர்.சி.பி காகவும், விராட் கோலிக்காகவும் தான் என வீடியோ எடுத்தனர். அதில் ஒரு இளைஞர் இந்த வீடியோ போலீசுக்காக என கமெண்ட் அடித்துள்ளார்.

"இது என்ன பிரமாதம் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு" என்பது போல இன்னொருபுறம் ஆர்.சி.பி ரசிகர் ஒருவர் ஜீப்பில் காலை தூக்கி படுத்துக்கொண்டு கோஷமிட்டார். நாட்டாமை படத்தில் நீதிடா..நியாயம்டா என்ற வசனத்தை போல தவம்டா..கோலிடா..கப்புடா என அந்த இளைஞர் கூவ அங்கிருந்த சக ஆர்.சி.பி ரசிகர்கள் குதூகலமாகினர்.

ஆர்.சி.பி வெற்றியை கொண்டாடுவது தப்பில்லை..ஆனால் பேருந்தை நிறுத்துவது..ஆபத்தான முறையில் பைக்கில் செல்வது என பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாடவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies