RECENT NEWS

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

Jun 06, 2025

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது

Jun 06, 2025

முகப்பு

"இனி உப்புமா இல்ல.. பிரியாணி”..சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய கேரள அரசு!..

Jun 04, 2025 03:05 PM

83

"இனி உப்புமா இல்ல.. பிரியாணி”..சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய கேரள அரசு!..

ஒரு சின்னஞ் சிறிய சிறுவனின் விருப்பம் ஒரு மாநிலத்தின் திட்டத்தையே மாற்றியிருக்கும் சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 3 வயதான சங்கு என்ற சிறுவன் தனது ”அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் தரணும்” என்று கூறியுள்ளார்.

இதனை அவரது தாய் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சின்னஞ் சிறு சிறுவனின் மழலை மொழி பலரையும் ரசிக்க வைத்தது. இதைத்தொடர்ந்து, சங்கு குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த வைரல் வீடியோ அரசாங்கத்தின் பார்வை வரைச் சென்றது.
”அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து சிறுவன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். உணவை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும்” என கேரள மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் அப்போது தெரிவித்திருந்தார். சங்கு குட்டியின் பேச்சுக்கு அரசு உடனடியாக பதிலளித்தது, கேரள மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பத்தனம்திட்டாவில் புதிய அங்கன்வாடி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பேசிய கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளா முழுவதும் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள உணவு மெனுவை அரசு மாற்றியமைத்துள்ளதாக கூறினார்.

முன்னதாக அங்கன்வாடி மையத்தில் வழக்கமான உப்புமா, இட்லி-சாம்பார், பால், கொழுக்கட்டை, இலையடை, கஞ்சி, பயிறு, பாயாசம் மற்றும் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சில புதிய மெனுகள் தற்போது இடம்பெற்றுள்ளன. அதன்படி அறிவிக்கப்பட்ட புதிய மெனுவில் - முட்டை பிரியாணி புலாவ், பருப்பு பாயாசம், சோயா உலர் கறி மற்றும் ஊட்டச்சத்து லட்டு போன்ற உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வாரத்துக்கு இரண்டு முறை வழங்கப்பட்ட முட்டை, பால், இனி வாரத்துக்கு மூன்று முறை வழங்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் கோரிக்கையை ஏற்று கேரளா முழுவதும் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் உணவு மெனுவை அரசு மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான 'சுவையான மற்றும் சத்தான உணவுகள் கிடைக்கும். ஒரு குழந்தையின் விருப்பத்தால் அங்கிருக்கும் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சுவையான உணவு கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதனால், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் செம குஷியில் இருக்கின்றனர். தனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு, அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு சங்கு குட்டி, நன்றி தெரிவித்திருக்கிறார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies