RECENT NEWS

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

முகப்பு

ரூட் எடுத்து செட்டிங் செய்த போலீஸ்.. ஆந்திராவில் சிக்கிய ரியல் ‘பிதாமகன்கள்’!

Jun 04, 2025 03:08 PM

91

ரூட் எடுத்து செட்டிங் செய்த போலீஸ்.. ஆந்திராவில் சிக்கிய ரியல் ‘பிதாமகன்கள்’!

சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், தேவி என்ற பெண், கிலோ கணக்கில் கஞ்சாவை சென்னையில் சப்ளை செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து, தேவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவருக்கு எங்கிருந்து கஞ்சா வருகிறது? என ரூட் எடுக்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக, ரெட்ஹில்ஸ் சுங்கச்சாவடி பகுதியில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கொண்டு வருவது தெரிய வந்தது. அந்த நபர்களை பின்தொடர்ந்து மொத்தமாக யாரிடமிருந்து வாங்குகிறார்கள்? என்று போலீசார் விசாரணை செய்தபோது, ஆந்திராவில் இருந்து, கொள் முதல் நடைபெறுவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, மொத்தமாக அந்த கும்பலை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகளாக மாறினர், சென்னை போலீசார். சுமார் 200 கிலோ கஞ்சா வேண்டும் என தரகர்கள் மூலமாக ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய கும்பலுக்கு தகவல்களை பாஸ் செய்தனர் காவல்துறையினர். இதையடுத்து, ஆந்திராவில் மொத்த கொள்முதல் செய்யும் நபரின் தொடர்பு கிடைத்தவுடன், அவரிடம் வியாபாரம் பேசுவதுபோல் போலீசார் அணுகியுள்ளனர்.

கஞ்சா வியாபாரி போல் சென்ற போலீசார், ஆந்திராவின் கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய நபரான பண்டார நாகேஸ்வரராவ் என்ற நபரை கைது செய்தனர். அவரை கைது செய்து விசாரித்தபோதுதான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கிழக்கு கோதாவரி ஆற்றின் அருகே உள்ள மலைப்பகுதிகளின், சுமார் 30 ஏக்கர் நிலத்தில் கஞ்சாவை பயிரிட்டு, மொத்தமாக சப்ளை செய்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். குறிப்பாக, பண்டார நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது சகோதரர் குபேந்திர ராவ் இருவரும் மலைப் பகுதிகளில் கஞ்சா பயிரிட்டு ஆட்களை வைத்து பராமரித்து வருகின்றனர்.

‘பிதாமகன்’ படத்தில் வருவதுபோல, மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்ட கஞ்சாவை, மலை அடிவாரத்தில் கொண்டு வந்து வைத்து விடுகின்றனர். அதை, பண்டார நாகேஸ்வரராவ் யாரெல்லாம் மொத்த விற்பனையாக கஞ்சாவிற்காக அணுகுகிறார்களோ, அவர்களுக்கு கிலோ கணக்கில் கஞ்சாவை சப்ளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பல்வேறு முறையில் சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் கஞ்சாவை பண்டார நாகேஸ்வரராவ் கடத்துவது தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் கஞ்சாவை கடத்தி வரும் கும்பல் சென்னை பகுதிக்குள் ரயில் நுழைந்தவுடன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கஞ்சாவை வெளியே வீசி விடுகின்றனர். அந்த இடத்தை கஞ்சா வாங்குபவர்களுக்கு தகவல் தெரிவித்து, அதை அங்கிருந்து எடுத்துச் செல்கின்றனர் என கூறப்படுகிறது.

இவ்வாறாக, கஞ்சா கடத்தலை மேற்கொண்டு இருக்கும்போது, கஞ்சா வாங்க வந்தது போல் நாடகமாடும் காவல்துறையிடமே, போகும் வழியில் இரண்டு நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ய வேண்டும் என பண்டார நாகேஸ்வரராவ் கொடுத்துள்ளார். முக்கிய சப்ளையரை கைது செய்ய சென்ற காவல்துறையினருக்கு, இலவச இணைப்பாக கஞ்சாவை வாங்கி சப்ளை செய்யும் கஜபதி மற்றும் தினேஷ் ஆகிய இருவர் சிக்கியுள்ளனர்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் பண்டார நாகேஸ்வரராவ் மற்றும் குபேந்திர ராவ் உற்பத்தி செய்யும் கஞ்சாதான் சப்ளை செய்யப்படுகிறது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, குற்ற வழக்கில் பண்டார நாகேஸ்வரராவ் சகோதரர் குபேந்திர ராவ் சிறைக்கு சென்று, சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரிகளை தொடர்பு கொண்டு மார்க்கெட்டிங் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தை செய்ய வேண்டும் என்றால் தனது சகோதரர் மூலமாக கஞ்சாவை ஆந்திராவிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு மார்க்கெட்டிங் செய்துள்ளார். அந்த வகையில், சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரியான திலீப் என்பவர் மூலமாக வெளியில் கஞ்சா வியாபாரம் செய்து வரும் அவரது மனைவி தேவி, பண்டார நாகேஸ்வரராவ்விடம் கஞ்சாவை வாங்கி சென்னையில் சப்ளை செய்தது தெரிய வந்தது.

இவ்வாறாக, தேவியின் மூலம் ரூட் எடுத்து கஞ்சா விளையும் இடம் வரை சென்று கஞ்சா கடத்தல் கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர், சென்னை போலீஸார். ராஜமுந்திரியில் கிழக்கு கோதாவரி ஆற்றின் அருகே உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதையும் கண்டுபிடித்து, அந்த கஞ்சாவை சிறையில் சகோதரர் மூலம் மார்க்கெட்டிங் செய்து சென்னை முழுவதும் கஞ்சா விற்பனையை அமோகமாக நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறையில் யார் யாரெல்லாம் குபேந்திர ராவை தொடர்பு கொண்டு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சென்னையில் பல கஞ்சா விற்பனையாளர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies