பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
13 பேரை காவு வாங்கிய ஆர்.சி.பி சாம்பியன் கோப்பை வெற்றிக் கொண்டாட்டம்..! உயிர்பலி உயரக் காரணம் என்ன..?
Jun 05, 2025 02:15 AM
164
13 பேரை காவு வாங்கிய ஆர்.சி.பி சாம்பியன் கோப்பை வெற்றிக் கொண்டாட்டம்..!
18 ஆண்டுகள் காத்திருந்து வாங்கிய ஐ.பி.எல் கோப்பை வெற்றிக்காக பெங்களூருவில் கூடிய ஆர்.சி.பி ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
18 ஆண்டு முயற்சிக்கு பிறகு ஆர்.சி.பி அணி ஐ.பி.எல்லில் சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில் அலைகடலென திரணட கூடிய ரசிகர்கள் நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் பதபதைக்கும் காட்சிகள் தான் இவை.
நடந்து முடிந்த 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. நட்சத்திர வீரர் விராட் கோலி இடம் பெற்றுள்ள இந்த அணிக்கு கோப்பை கனவு நீண்டதாகவே இருந்ததால் இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாட கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் (( வாரியமும்)) முடிவு செய்தது.
சட்டப்பேரவை வளாகமான விதான் சௌதாவில் அரசு சார்பிலும், அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ((வாரியம் ))சார்பிலும் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விதான் சவுதா விழாவில், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்ற நிலையில், விதான் சௌதாவிலிருந்து கோப்பையுடன் வீரர்கள் மைதானத்திற்கு பயணமானார்கள்.
மைதானத்தில் ஏற்கனவே ரசிகர்கள் நிறைந்திருந்த நிலையில் காசு கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டுமா, இலவச நுழைவா எனத் தெரியாமல் ஏராளமானவர்கள் கவுன்டர் முன்பு காத்திருந்தனர். அப்போது திடீரென மைதான நுழைவு வாயில் திறக்கப்பட்டதால் டிக்கெட் எடுக்க காத்திருந்தவர்களும் விதான் சௌதா பகுதியிலிருந்து வந்தவர்களும் மைதானத்திற்குள் ஒரே நேரத்தில் நுழைய முயன்றதால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக 6,7, 12, 18 ஆகிய நுழைவு வாயில் எண்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் 6 ஆவது நுழைவு வாயிலில் திடீரென நெரிசல் அதிகரித்து ஒருவர் மீது ஒருவர் ஏறியதால் சிலர் கீழே விழுந்தனர்.
ஆனாலும், மைதானத்திற்குள் நுழைய ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறியதால் கீழே விழுந்தவர்களைக் கூட மிதித்துச் செல்லும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
ஸ்டேடியத்தின் வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது ரசிகர்கள் ஏறியதால் அவையும் உடைந்து நொறுங்கியது
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த சுமார் 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை போலீஸார் தங்களது கைகளில் தூக்கிக் கொண்டு சென்றனர்.
இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் மைதானத்திற்குள் நுழைய முயன்ற கூட்டத்தினரை எச்சரித்தும் கலையாததால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மைதானத்திற்கு வெளியே பல உயிர்கள் பலியான நிலையிலும், மைதானத்தின் உள்ளே எவ்வித சலசலப்பும் இல்லாமல் ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தேறியது.
மைதானத்தில் இருந்த கூட்டம் ஊர் திரும்ப மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்ததால் சென்ட்ரல் காலேஜ், கப்பன் பார்க், விதான் செளதா, சின்னசாமி ஸ்டேடியம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க உடனடியாக அவை மூடப்பட்டன.
ஆனாலும் இந்த தகவல் சரிவர கிடைக்கப்பெறாத ரசிகர் கூட்டம் ரயில்களை இயக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
ஆர்.சி.பி கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டம் பல உயிர்களை பழி வாங்கிய நிலையில், அரசியல் கட்சியினரும் இதனை விவாதமாக்கி உள்ளனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமாருக்கு எதிராக கடும் கணடன குரல்கள் எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu