RECENT NEWS

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

Jun 06, 2025

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

Jun 06, 2025

முகப்பு

80 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது இளைஞன் ..

Jun 05, 2025 01:11 PM

78

80 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து பலாத்காரம்  செய்து கொன்ற  19 வயது இளைஞன் ..

வீட்டில் இருந்த 80 வயது மூதாட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான கணவரை இழந்த மூதாட்டி ஒருவர், மன வளர்ச்சி குன்றிய மகனோடு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள மாந்தோப்பு வீட்டில் வசித்து வந்துள்ளார். மூதாட்டியின் மகள் சென்னையில் இருப்பதால் அவரது பேத்தி மூதாட்டியை கவனித்து வந்துள்ளார்.

கடந்த 3 ஆம் தேதியன்று மூதாட்டியின் பேத்தி மாலை 4.20 மணி அளவில் தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூதாட்டி வீட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது.

உடனே பதறிப்போன அவரின் பேத்தி, அருகில் இருந்த புதர் நிறைந்த பகுதியில் தேடியபோது அங்கு மூதாட்டி ஆடைகள் கலைந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு நகர போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்தபோது, வீட்டிற்குள் ஒரு இளைஞன் வருவதும் அந்த நபர் மூதாட்டியிடம் அத்துமீற முயன்றதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அந்த நபரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தபோது, அந்த இளைஞன் தள்ளி விட்டதில் மூதாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த இளைஞன் மூதாட்டி என்றும் பார்க்காமல் தரதரவென இழுத்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. புதருக்குள் மூதாட்டியை இழுத்து சென்ற அந்த கொடூரன் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சியில் இருந்த அந்த நபர் யார் என போலீசார் விசாரித்தபோது, மூதாட்டியின் வீட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் நந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. நந்தகுமார் மூதாட்டியின் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரப்பகுதியில் அமர்ந்து நண்பர்களோடு மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று நந்தகுமார் மது அருந்திவிட்டு, மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று ரகளையில் ஈடுபட்டதும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கவனித்த அந்த காமுகன் அதனை உடைக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.

புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies