பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
அழகிப் பட்டம் வென்றவரின் அகால மரணம்.. நம்பி வந்தவரைக் கொன்ற காதல் கணவன்.. இன்னமும் திருந்தாத பேராசைப் பேய்கள்!..
Jun 05, 2025 04:09 PM
62
சினிமா ஹீரோ ஹீரோயின் போல வெட்டிங் ஷூட் நடத்தி காதல் திருமணம் செய்துகொண்ட ராஜ்மோகன் - ஸ்டெபி மெடில்டா தம்பதி இவர்கள்தான்.
தாம்பரம் அருகே வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் சுனிதா தேவியின் கணவர் இறந்துவிட்ட நிலையில், தங்களுக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தை வைத்து இரண்டு மகள்கள், ஒரு மகனை ஆளாக்கி வந்துள்ளார். இரு மகள்களில் இரண்டாவது மகள் ஸ்டெபி மெடில்டா, மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். மிஸ் சென்னை பட்டம் வென்றவர்.
கடந்த 2022ஆம் ஆண்டு சுனிதா தேவியின் வீட்டுக்கு வாடகைக்கு வந்த ராஜ்மோகன், ஸ்டெபி மெடில்டாவைக் காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மகள் ஆசைப்பட்டுவிட்டாளே என்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார் சுனிதா தேவி.
வரதட்சணையாக 100 சவரன் நகை மற்றும் கார் வேண்டும் என்பதில் ராஜ்மோகன் வீட்டினர் கரராக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பெண் வீட்டார் தங்களால் அவ்வளவு முடியாது எனக் கூறி 45 சவரன் நகை, இரு சக்கர வாகனம் வீட்டு உபயோக பொருட்கள் என 7 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கி உள்ளனர் .
அதுமட்டுமில்லாமல் திருமணத்துக்கு முன்பே சிறுக சிறுகப் பெண் வீட்டாரிடமிருந்து ரொக்கமாகவும் யுபிஐ மூலமும் பல லட்சம் ரூபாயை ராஜ்மோகன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணிச் சென்ற ஸ்டெபி மெடில்டாவிடம் அவரது வீட்டில் பணம், நகை வாங்கி வரச் சொல்லி கணவரும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக மனம் நொந்து தனது தோழியிடம் ஸ்டெபி மெடில்டா பேசிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்தான் கடந்த 3ஆம் தேதி ஸ்டெபி மெடில்டாவின் சகோதரரை தொலைபேசியில் அழைத்த ராஜ்மோகன் குடும்பத்தினர், உடனடியாக வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டு போனை துண்டித்துள்ளனர். பதறி அடித்துக் கொண்டு பெண் வீட்டார் சென்று பார்த்தபோது, ஸ்டெபி மெடில்டா உடல் முழுவதும் காயங்களுடன் மூக்கில் நுரை வடிய மயங்கிக் கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் ஸ்டெபி மெடில்டா தாக்கப்பட்டு, விஷம் கொடுத்திருப்பது உறுதியானதாகக் கூறப்படும் நிலையில், ராஜ்மோகனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu