பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
RCB வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆசையோடு சென்ற திருப்பூர் பெண் உயிரிழப்பு.. அங்கு நடந்தது என்ன?
Jun 05, 2025 04:17 PM
277
18 ஆண்டுகளுக்கு பின் முதல் ஐ.பி.எல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதை கொண்டாடும் விதமாக கடந்த 4 ஆம் தேதியன்று சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு எதிர்பார்த்ததை விட அதிகமான ரசிகர்கள் விளையாட்டு மைதானம் முன்பு திரண்டனர். நுழைவு வாயில் திறக்கப்படாமல் இருந்த நிலையில் டிக்கெட் எடுக்க காத்திருந்தவர்களும் , கையில் பாஸ் வைத்திருந்தவர்களும் வாசல் முன்பு குவிந்தனர். அப்போது கேட் திடீரென திறக்கப்பட்டதும் முண்டியடித்து கொண்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர்.
அதில் சிலர், அங்கு நின்றவர்கள் மீது ஏறி செல்ல முயன்றனர். அப்போது கூட்ட நெரிசலில் கீழே விழுந்த சிலர் சிக்கிக் கொண்டனர். இந்த நெரிசலில் 13 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் என்பது தெரியவந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளரின் மகளான 28 வயதான காமாட்சி தேவி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஐ.பி.எல் இறுதிப்போட்டியை நேரில் காண வேண்டும் என ஆசைப்பட்ட காமாட்சி தேவிக்கு போட்டிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. போட்டியை தான் நேரில் காணமுடியவில்லை கொண்டாட்டத்திலாவது கலந்து கொள்ள வேண்டும் என நினைத்த காமாட்சி தேவி, தனது அறை நண்பர்களோடு அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கிய காமாட்சி தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த அவரது நண்பர்கள் நடந்ததை காமாட்சி தேவியின் பெற்றோருக்கு தெரிவித்த நிலையில், தனது ஒரே மகள் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து காமாட்சி தேவியின் உடல் உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது தந்தை நடத்திவரும் தனியார் பள்ளி வளாகத்தில் காமாட்சி தேவியின் உடல் வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu