RECENT NEWS

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

Jun 06, 2025

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

Jun 06, 2025

முகப்பு

Honeymoon trip- ஆ? Honey Trap- ஆ?.. தேனிலவுக்கு சிரபுஞ்சி சென்ற புதுமாப்பிள்ளை மர்ம கொலை.. காணாமல் போன புதுப்பெண்!..

Jun 05, 2025 04:20 PM

96

Honeymoon trip- ஆ? Honey Trap- ஆ?.. தேனிலவுக்கு சிரபுஞ்சி சென்ற புதுமாப்பிள்ளை மர்ம கொலை.. காணாமல் போன புதுப்பெண்!..

ஆங்கிலேயே அரசால் Sohra என அழைக்கப்பட்ட Cherrapunji, உலகில் அதிகளவில் மழை பெய்யும் பகுதியாக உள்ளது. இதயத்தை ஜிலீரிடவைக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சிரபுஞ்சிக்கு, ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும். மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோரா பகுதி, இந்தியாவின் முக்கிய பேரழகியலான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர், ராஜா ரகுவன்ஷி என்பவருக்கும், 27 வயது சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, புதுமணத் தம்பதியர் சிரபுஞ்சிக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

இதையடுத்து, கடந்த மே 23 ஆம் தேதி, புதுமணத் தம்பதியர் சிரபுஞ்சி பகுதிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு, இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து உற்சாகமாக சுற்றிப்பார்த்தவர்கள், 24 ஆம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, புதுமண தம்பதியர் இரண்டு பேரின் செல்ஃபோன்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புகொண்டபோது, ‘Not Reachable’ நிலையிலேயே இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போனதால், 8 நாட்களுக்குப் பின் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பிறகு, புகாரின்பேரில் புதுமணத் தம்பதியரை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் வலைவீசி தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது, புதுமண தம்பதியர் தங்கி இருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், உள்ள பள்ளத்தாக்கில் புதுமாப்பிள்ளையின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவரது கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. இதனை வைத்தே புதுமாப்பிள்ளை ராஜா குவான்ஷி என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்து, கதறி அழுதுள்ளனர். மேலும், அதே இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற ஆடை, உடைந்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்ததாக கூறப்படுகிறது. சோனமின் ஆடைகளாகவும் உடமைகளாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், புதுமாப்பிள்ளை ராஜா குவான்ஷி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனால், புதுமணப் பெண் சோனாவை தேட ஆரம்பித்துள்ளது, காவல்துறை.

தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றபோது, 11 நாட்களுக்குப் பிறகு ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து புதுமாப்பிள்ளையின் உடல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது, புதுமணப் பெண் காணாமல் போனது, வடகிழக்கு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவையே உலுக்கிய இந்த படுகொலை வழக்கை விசாரித்த மேகாலயா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, “டாவோ எனப்படும் வாளை வைத்து ராஜா குவான்ஷி கொல்லப் பட்டிருக்கிறார் என கூறியுள்ளார்கள். கொல்லப்பட்ட ஆயுதத்தையும் மீட்டதோடு அவரது, உடல் அருகே கிடந்த அவரது மொபைல் போனையும் மீட்டுள்ளனதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிழக்கு காசி ஹில்ஸ் காவல் கண்காணிப்பாளர் விவேக் சியீம் கூறும்போது, “இது கொலை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரியவருகிறது. புதுமண தம்பதியர் நோங்ரியாட்டில் வந்து தங்கியிருந்த ஷிபாரா ஹோம்ஸ்டேயில் இருந்து கடைசியாக வெளியே வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள், வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டி அவர்கள் காணாமல் போன ஒரு நாள் கழித்து சோஹ்ராரிமில் கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ரியாத் அர்லியாங்கில் உள்ள வெய்சாவ்டோங் வாகன நிறுத்துமிடத்திற்கு கீழே உள்ள, ஆழமான பள்ளத்தாக்கில் ராஜா குவான்ஷி உடல் ட்ரோன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. சோனமின் இருப்பிடம் தெரியவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், கொலை வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தாலும் கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளையின் குடும்பத்தினரோ, சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு அவரது குடும்பத்தினர் சில காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, “அவர் கடத்தப்பட்டு வெயிசாடோங் நீர்வீழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாக நாங்கள் சந்தேகித்தோம். என் சகோதரனும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்வது சாத்தியமில்லை. இது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலை வழக்கு என்று நாங்கள் கூறும்போது, உள்ளூர் போலீசார் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை” என ராஜா குவான்ஷி யின் சகோதரர் ரகுவன்ஷி, குற்றம்சாட்டியுள்ளார்.

புதுமண தம்பதியினரின் குடும்பத்தினர் முன்னதாக, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமான மேகாலயா, Cherrapunji யில் சுற்றுலாவுக்கு வந்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், மாநில சுற்றுலா அமைச்சர் பால் லிங்டோ தனது அதிர்ச்சியை வெளிப்படுயுள்ளார். அவர் கூறும்போது, "காவல்துறை விசாரணை நடந்துவருகிறது. அதுவரை, காத்திருங்கள். நடந்த சம்பவங்களால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இதுவரை இங்கு இப்படியொரு குற்றச் சம்பவம் நடந்ததில்லை. முழு விவரமும் இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை, என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது. தாய்லாந்தில் ஒருவர் காணாமல் போனால், தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்றது என்று அர்த்தமல்ல" என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறும்போது, “காணாமல் போன புது மணப்பெண்ணை கண்டுபிடிக்க நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுக்கும் முயற்சிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். இந்த விவகாரம் குறித்து மாநில அரசின் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேடுதல் பணியில் இருக்கும் போலீஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என கூறியுள்ளார். காவல்துறையைத் தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழு ஆகியவை தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில், புதுமணப் பெண் சோனம் கடத்தப்பட்டாரா? அல்லது கடத்தி கொல்லப்பட்டாரா? அவர் உயிரோடு உள்ளாரா? என்கிற கோணத்தில் தேடிவருவதோடு, Honeymoon trip என்கிற பெயரில் வரவழைக்கப்பட்டு, புதுமணப் பெண் சோனம் தரப்பினரால் கொல்லப்பட்டரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்துவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜில்லென்ற குளிர் வீசும் பகுதியான சிரபுஞ்சி, இந்த படுகொலை சம்பவத்தால், வெப்பமாக தகிக்க ஆரம்பித்திருக்கிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies