பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு.. சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததா?.. ராமதாசை குருமூர்த்தி சந்தித்ததால் பரபரப்பு..
Jun 05, 2025 04:27 PM
52
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தந்தையும், பா.ம.க. நிறுவனருமான ராமதாசை சந்திக்க கட்சித் தலைவர் அன்புமணி இன்று காலை திடீரென புறப்பட்டுச் சென்றார். மகள் சஞ்யுத்ராவுடன் ராமதாசை சந்திக்கச் சென்ற அன்புமணி சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பூட்டிய அறைக்குள் நடைபெற்ற சந்திப்பில் ராமதாசின் மூத்த மகள் காந்திமதியும் பங்கேற்றார். பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமன நடவடிக்கையை ராமதாஸ் கைவிட அன்புமணி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதே சமயம், கட்சியின் செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்க வேண்டும் என்றும் கட்சி இளைஞர் அணி தலைவர் பதவியில் முகுந்தன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணியிடம் ராமதாஸ் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது ராமதாஸ் மற்றும் அன்புமணி தங்கள் முடிவில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் பேசியும் ராமதாஸ் தனது முடிவில் இருந்து இறங்கி வராததால் தைலாபுரத்தில் இருந்து அன்புமணி ஏமாற்றதுடன் புறப்பட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது. செய்தியாளர்கள் ஏராளமானோர் காத்திருந்தும் அன்புமணி கார் கண்ணாடியை கூட இறக்காமல் கடந்து சென்றார்
அன்புமணி புறப்பட்ட சில நிமிடங்களில் ராமதாசை அரசியல் விமர்சகரும் துக்ளக் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். அப்போது, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் உடன் சென்றார்.
வரும் ஞாயிறன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ள நிலையில் தைலாபுரத்தில் ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துள்ளார். கடந்த முறை அமித் ஷா தமிழகம் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். கட்சியில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த விழாவில் பா.ம.க. பங்கேற்கவில்லை. இந்நிலையில், ராமதாஸ் விரும்பும் அ.தி.மு.க.வும், அன்புமணி விரும்பும் பா.ஜ.க.வும் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளதால், பா.ம.க.வை கூட்டணியில் இணைக்க ஆடிட்டர் குருமூர்த்தி முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குருமூர்த்தி, பா.ஜ.க.விற்காக ராமதாசிடம் பேச தான் வரவில்லை என்றும் இங்கு அன்புமணி வந்ததே தனக்கு தெரியாது என்றும் விளக்கமளித்தார்.
இதனிடையே, த.வா.க. தலைவர் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன் நேற்று ராமதாசை சந்தித்தது கட்சியில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. திருமால்வளவன் பா.ம.க.வில் இருந்த போது அன்புமணி இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அன்புமணியை கடுமையாக எதிர்த்து வந்த திருமால்வளவன் ராமதாசை திடீரென நேற்று சந்தித்தார். பின்னர் பேட்டியளித்த திருமால்வளவன், தான் வந்து ராமதாசை சந்தித்தால் உடனடியாக அன்புமணியும் அவரை சந்தித்துவிடுவார் எனக்கூறினார்.
வேல்முருகன் சகோதரர் திருமால்வேலன் புதனன்று கூறியது போலவே வியாழனன்று காலை அன்புமணி, ராமதாசை சந்தித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu