RECENT NEWS

பாண்டிய மண்டலத்தில் அரங்கேற்றிய வள்ளி கும்மியாட்டம்

பாண்டிய மண்டலத்தில் அரங்கேற்றிய வள்ளி கும்மியாட்டம்

Jun 07, 2025

பாண்டிய மண்டலத்தில் அரங்கேற்றிய வள்ளி கும்மியாட்டம்

பாண்டிய மண்டலத்தில் அரங்கேற்றிய வள்ளி கும்மியாட்டம்

Jun 07, 2025

BIG STORIES

சிக்கன் குழம்பில் ‘பல்லி’.. சாப்பிடுவதற்கு முன்பே வெளியான ப்ளான் ஆடியோ.. சிக்கிட்டான்...சிக்கிட்டான்...!

Jun 06, 2025 08:02 AM

91

சிக்கன் குழம்பில் ‘பல்லி’.. சாப்பிடுவதற்கு முன்பே வெளியான ப்ளான் ஆடியோ.. சிக்கிட்டான்...சிக்கிட்டான்...!

சிக்கன் குழம்பில் ‘பல்லி’.. சாப்பிடுவதற்கு முன்பே வெளியான ப்ளான் ஆடியோ.. சிக்கிட்டான்...சிக்கிட்டான்...!

கோவை ஆர்.எஸ் புரம் வி.சி.வி லே அவுட் பகுதியில் கோவை பிரியாணி என்ற உணவகம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

கடந்த 27 ஆம் தேதி பிற்பகல் 2.50 மணி அளவில் 4 பேர் காரில் ஓட்டலுக்கு வந்து உள்ளனர். அவர்கள், டேபிளில் அமர்ந்து சிறிது நேரம் உணவு எதையும் ஆர்டர் செய்யாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தனர்.

அதன் பின்னர், பிரியாணி ஆர்டர் செய்தனர். சப்ளையர் அவர்கள் கேட்ட பிரியாணியை இலையில் பரிமாறினார். சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவர் பிரியாணியில் ஊற்றிய சிக்கன் குழம்பில் பல்லி இறந்து கிடப்பதாக கூச்சல் எழுப்பினார்.

உடனே அவருடன் வந்து இருந்த நபர்களும் சத்தம் போட்டபடி சப்ளையர் உள்ளிட்டோரை மிரட்டினர். இதை பார்த்த ஹோட்டல் மேனேஜர் சுப்பிரமணியம் உடனே அங்கு சென்று பார்த்துள்ளார்.

அதற்குள், அந்த நபர்கள் அங்கு நடந்தவற்றை வீடியோ எடுக்க தொடங்கினர். பிறகு, அந்த நபர்கள் அங்கு இருந்து காரில் வேகமாக புறப்பட்டு சென்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நேரில் வந்து விசாரித்தார். ஹோட்டல் உரிமையாளர் உமாபதி ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருந்த, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதேநேரத்தில், சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்ற தகவல் ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்தது.

3 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு நடராஜன் என்பவர் 1:20 மணிக்கே பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்த விபரமும் அதற்குரிய ஆடியோ மற்றும் நடராஜன் என்பவர் அவரது செல்போனில் இருந்து அனுப்பிய கூகுள் மேப் லொகேஷன், ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் உரிமையாளர் உமாபதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நடைபெறப்போகும் சம்பவத்தை முன் கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகம் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஊருல உள்ள வூட்ட எல்லாம் இழுத்து பூட்டுன சோழமண்டலம் ஆபீஸுக்கு போட்டான் பாரு பூட்டு..! சரக்கு வாகன ஓட்டுனர் ஆவேசம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies