RECENT NEWS

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்..  கைது செய்த போலீசார்..

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்.. கைது செய்த போலீசார்..

Jun 07, 2025

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்..  கைது செய்த போலீசார்..

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்.. கைது செய்த போலீசார்..

Jun 07, 2025

BIG STORIES

ஊருல உள்ள வூட்ட எல்லாம் இழுத்து பூட்டுன சோழமண்டலம் ஆபீஸுக்கு போட்டான் பாரு பூட்டு..! சரக்கு வாகன ஓட்டுனர் ஆவேசம்

Jun 07, 2025 01:30 AM

284

ஊருல உள்ள வூட்ட எல்லாம் இழுத்து பூட்டுன சோழமண்டலம் ஆபீஸுக்கு போட்டான் பாரு பூட்டு..! சரக்கு வாகன ஓட்டுனர் ஆவேசம்

தவணை தொகை செலுத்தாதவர்களின் வீடுகளை நீதிமன்ற உத்தரவு பெற்று சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தினர் சீல் வைத்து வரும் நிலையில், தங்களிடம் விற்ற சரக்கு வாகனத்துக்கு என்.ஓ.சி சான்று தராமல் இழுத்தடித்ததாக கூறி கம்பத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது

சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் கடன் பெற்று தவணை தொகையை முறையாக செலுத்தாதவர்களின் வீடுகளை நீதிமன்ற உத்தரவு பெற்று இழுத்து பூட்டி சீல் வைத்து ஜப்தி செய்து வருகின்றனர்.

வீட்டு உரிமையாளர்கள் பரிதவிப்புடன் வீதியில் நிற்க சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவன் ஊழியர்கள் சட்டத்தை காண்பித்து கறார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தின் இரும்பு கேட்டுக்கு சரக்கு வாகன உரிமையாளர் ஒருவர் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்தி நடவடிக்கை என்று ஊரில் உள்ள வீடுகளை எல்லாம் பூட்டி வந்த சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தின் கேட்டுக்கே பூட்டு போடப்பட்டதால், ஊழியர்கள் வீதியில் நின்றனர்.

எப்படி பூட்டலாம் ? என்று மிரட்டும் தோணியில் குரல் கொடுத்த ஊழியர்களை நோக்கி , எதுக்கு அதட்டுற ?என்று பாதிக்கப்பட்டவர் தரப்பில் இருந்து வலுவான குரல் பதிலாக வந்ததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் பம்மினர்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முருகன் என்பவர் , கம்பம் காந்தி சிலை அருகே அமைந்துள்ள சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் பறிமுதல் செய்து ஏலம் விட்ட மினி லாரி ஒன்றை ஆறு லட்சத்து 5000 ரூபாய் விலை பேசி வாங்கியுள்ளார். கடந்த 2024 ஏழாவது மாதம் பணத்தைக் முழுமையாக கட்டி லாரியை பெற்றுள்ளார்.

இரண்டு மாதங்கள் கழித்து இந்த மினி லாரிக்காண ஆவணங்கள் நிறுவனத்திடம் இருந்து வாங்கிச் சென்றுள்ளார். என்ஓசி என்ற தடையில்லா சான்று மட்டும் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் என்ஓசி சான்றிதழை தருவதாக கூறி பைனான்ஸ் நிறுவனத்தினர் மாதந்தோறும் திருநெல்வேலியில் இருந்து கம்பத்திற்கு அலைக்கழித்ததோடு, தற்போது வரை அந்த சான்றிதழ் வழங்காததால் , சோழமண்டலம் நிறுவனத்தின் கம்பம் கிளையை பூட்டு போட்டு பூட்டியதாக தெரிவித்தார் முருகன்.

சரக்கு வாகனத்தை ஏற்கனவே வைத்திருந்த கம்பத்தைச் சார்ந்த ராம்குமார் என்பவரும் அவருடன் வந்திருந்தார். ராம்குமார் இடமிருந்து இந்த வண்டியை பறிமுதல் செய்து எடுத்து சென்றதற்கான சீசிங் லெட்டர் மற்றும் என் ஓ சி சான்றிதழ் வழங்காமல் பைனான்ஸ் ஊழியர்கள் இருந்துள்ளனர்.

இதனால் அவர் வண்டியை பறி கொடுத்த பின்னரும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதாக கூறிய அவர், இதனால் தானும் ஒரு பூட்டு போட்டு பூட்டியதாக தெரிவித்தார்.

பைனான்ஸ் நிறுவணா உயர் அலுவலர்கள் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கம்பம் தெற்கு காவல் நிலையத்தை சார்ந்த காவலர்களும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது அலுவலகத்தை திறந்து விடுமாறும் ,இச்சம்பவம் குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து இரண்டு பூட்டுகளும் திறக்கப்பட்டது.

தங்களுக்கு வர வேண்டிய 3 தவணை தொகை தவறினாலே வட்டிக்கு வட்டி போட்டு வசூலிப்பதும், சர்பாசி சட்டபிரிவை சுட்டிக்காட்டி நீதிமன்ற அனுமதி பெற்று அடமான சொத்துக்களை ஜப்தி செய்வதையும் வழக்கமாக கொண்ட சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், முதல் முறையாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் தவித்து நின்றது குறிப்பிடதக்கது.

அதே நேரத்தில் இருவரும் தங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை முழுமையாக செலுத்தாததால் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என்று சோழமண்டலம் பைனான்ஸ் தரப்பில் விளக்கம் அளித்தனர்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies