முகப்பு
லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி.. வாடிக்கையாளர்களின் பணத்தை...அபேஸ் செய்த வங்கி அதிகாரி.. பின்னணி என்ன?
Jun 07, 2025 09:54 AM
36
லக்கி பாஸ்கர் திரைப்பட பாணியில், வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருந்த வைப்புத்தொகையைத் திருடி, பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெண் அதிகாரி பிடிபட்ட சம்பவம், பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் வங்கிகளில் பணம் சேமித்து வைப்பதை மிகவும் பாதுகாப்பானதாக கருதி வருகின்றனர். இதனடிப்படையில் பலர், வங்கிகளில் fixed டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் அப்படி பணத்திற்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டிய அதிகாரிகள் சிலர் பணத்தை சுருண்டும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கிளையின் அதிகாரியாக இருந்தவர் சாக்ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், தனது தேவைக்காக பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கிலிருந்த பணம், ஏற்கனவே எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில், வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தியபோது அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அந்த வங்கியில் பணியாற்றும் சாக்ஷி குப்தா, வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டெபாசிட் தொகையைக் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது.
சாக்ஷி, அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மொத்தம் 41 வாடிக்கையாளர்களின் 101 பிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து பணத்தை கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை எடுத்தால் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும் என முன்கூட்டியே கணித்த சாக்ஷி, பணத்தை எடுப்பதற்கு முன், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்திருந்த போன் நம்பரை மாற்றி, தனது உறவினர்களின் நம்பரை அதில் சேர்த்து, ஒ.டி.பி வாடிக்கையாளர்களுக்குச் செல்லாமல் அதனை தடுத்திருக்கிறார்.
இப்படி 4 கோடியே 58 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்த பணத்தை அவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. கிட்டத்தட்ட 2020 ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வைத்திருந்த டெபாசிட் தொகையை ஷாக்ஷி கையாடல் செய்துள்ளார்.
ஆனால் சாக்ஷி எதிர்ப்பார்த்ததுபோல் அவருக்கு நடக்கவில்லை, மாறாக அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் அனைத்தும் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தது. இதனால் வங்கியில் கையாடல் செய்த பணத்தை அவரால் திரும்பச் செலுத்த முடியாமல் போனது. இதனால் யாரிடமும் சொல்ல முடியாமல் அப்படியே இருந்துள்ளார்.
இந்த நிலையில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் சாக்ஷி குப்தா. தனது சகோதரி திருமணத்தில் கலந்து கொண்டிருந்தபோது அவரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்திலும் சாக்ஷியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியால் அதிர்ச்சியடைந்துள்ள அந்த வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், ”வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக வங்கியில் வைக்கிறோம். ஆனால் வங்கியில் இது போன்று நடந்தால் எங்குக் கொண்டுபோய் வைப்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை வங்கி நிர்வாகம் சரி செய்து கொடுக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட பாணியில், வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருந்த வைப்புத்தொகையைத் திருடி, பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெண் அதிகாரியின் துணிகர சம்பவம், பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu