முகப்பு
ஓ.. இது தான் அந்த ஐடி வேலையா.. வீடியோ காலில் சிக்கிய டாக்டர்.. வீட்டுக்குள் சடலமான பெண்..!அடுத்தடுத்த திருப்பத்தால் திகில்..
Jun 07, 2025 02:01 PM
163
சென்னை திருவெற்றியூர் சத்துமா நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா என்கிற நித்யாஸ்ரீ . 26 வயதான இவர் கடந்த ஐந்து வருடங்களாக அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாக தெரிவித்து வந்தார். கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி ஐந்தாவது தெருவில் வீடு எடுத்து நித்தியா ,ஆண் நண்பர் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். கடந்த 5ந்தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் நித்யா வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நித்யாவின் பெற்றோர்களை வரவழைத்து விசாரித்தனர் இதில் நித்யா ஒரு பையனோடு பழகி வருவது மட்டுமே தெரியும் என்றும் லிவிங் டுகெதர் முறையில் இருப்பது தெரியாது என்றனர். மேலும் நித்தியாவிடம் 25 சவரன் நகைகள் இருந்தது அதனை காணவில்லை என்றும் பாலமுருகன் எனது மகளை கொன்று விட்டு நகைகளை எடுத்திருக்கலாம் என நித்யாவின் பெற்றோர் புகார் அளித்ததால் இந்த வழக்கின் விசாரணை தீவிரமானது.
பாலமுருகனிடம் நடத்திய விசாரணையில் நித்யவின் பெற்றோர் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும். கடைசியாக நித்தியாவை பார்க்க 5 ந்தேதி காலையில் வந்த அவரது தாய் வந்தபோது கூட நான்காயிரம் ரூபாய் பணத்தை நித்யாவின் பரிசிலிருந்து எடுத்ததாகவும், இதனால் நித்தியாவிற்கும் அவரது தாயாருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தாய் வருவதாக கூறி தன்னை நித்யா வெளியில் போக சொன்னதாகவும், சம்பவத்தன்று மாலை நித்யாவை நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் நித்தியா போனை எடுக்காததால் தான் வீட்டிற்கு திரும்பி வந்ததாகவும் கூறியுள்ளார்.
முதலில் அம்பத்தூரில் தாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது நித்யாவிற்கு வீட்டில் வைத்து தாலி கட்டியதாகவும் ஆனால் அதன் பிறகு நித்தியா தாலியை கழட்டி விட்டதாகவும் தெரிவித்தார் பாலமுருகன். தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் நித்தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த நித்தியாவின் உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்பதும் ஏதோ ஒரு பாய்சன் சாப்பிட்டு அவர் உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது நித்தியா கடைசியாக மருத்துவர் ஒருவரிடம் பேசியது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .
ஆலந்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற அந்த மருத்துவரை, கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது . மருத்துவருடன் வீடியோ காலில் பேசி ஆசை வலை விரித்த நித்தியா, அவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் பறித்தது தெரிய வந்தது . நித்தியா ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி தனது பெற்றோர்களையும் உடன் பழகுபவர்களையும் ஏமாற்றியதும் அம்பலமானது. உண்மையில் நித்தியா வீடியோ காலில் அரை நிர்வாணமாக இருப்பதற்கு குறிப்பிட்ட தொகையையும், முழு நிர்வாணமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் பேசி பல பேரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதே போன்று வீடியோ காலில் மயங்கி வசமாக சிக்கியவர் தான் பாலமுருகன் என்பதும் அவரும் ஐந்து சவரன் நகை மற்றும் பணத்தினை நித்தியாவிடம் இழந்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் நித்தியா தன்னுடன் பழகுபவர்களை பார்ட்டி பப் என அழைத்துச் சென்று மது போதையில் இருப்பதையும் வாடிக்கையாக வத்திருந்ததாக கூறப்படுகின்றது.
உயிர் இழப்பதற்கு முன்பு நித்யா கடைசியாக டாக்டருக்கு போன் செய்து நான் உன்னுடன் மனைவியாக வாழ வேண்டும் என போதையில் உருக்கமாக பேசியதாகவும், நித்தியாவின் நடவடிக்கை பிடிக்காத்தால், அவரது ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததாகவும் சந்தோஷ்குமார் போலீசாரிடம் தெரிவித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று சந்தோஷ்குமார் நித்தியாவின் வீட்டுக்கு வந்து சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. கிடுக்கிப்பிடி விசாரணையில் நித்தியவிற்கு மதுவில் அளவுக்கதிகமான தூக்கமாத்திரையை கலந்து கொடுத்து மயங்க செய்ததாகவும், பின்னர் தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நித்தியாவின் நகைகளை திருடிச்சென்று கூட்டாளி முஜிபூர் பாஷாவிடம் கொடுத்து வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து நித்தியா கொலை தொடர்பாக மருத்துவர் சந்தோஷ்குமார் , முஜிபூர் பாஷா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வீடியோகால் வில்லங்கத்தால் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu