RECENT NEWS

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

Jun 08, 2025

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

Jun 08, 2025

BIG STORIES

“யூடியூப்பரை நம்பினோர் நடுத்தெருவில் நிற்பர்” ஆடு தருவதாக அல்வா..! குர்பானி ஆசை காட்டி கோல்மால்..!

Jun 08, 2025 02:52 AM

56

“யூடியூப்பரை நம்பினோர் நடுத்தெருவில் நிற்பர்” ஆடு தருவதாக அல்வா..! குர்பானி ஆசை காட்டி கோல்மால்..!

ஆடு தருவதாக அல்வா..! குர்பானி ஆசை காட்டி கோல்மால்..!

குர்பானிக்கு குறைந்த விலைக்கு ஆட்டு கிடா தருவதாக யூடியூப்பர்கள் மூலம் விளம்பரப்படுத்திய வாடிப்பட்டி ஆயிஷா ஆட்டுப்பண்ணை உரிமையாளர், லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து கொண்டு தலைமறைவானதால் பணம் கட்டியவர்கள் குர்பாணி கொடுக்க இயலாமல் ஏமாற்றமடைந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்

8 ஆயிரம் ரூபாய்க்கு 30 கிலோ ஆட்டுக்கிடா.. 13 ஆயிரம் ரூபாய்க்கு 40 கிலோ ஆட்டுக்கிடா என்று யூடியூப்பரிடம் அள்ளிவிட்டு மொத்தமாக மார்க்கத்து மக்களுக்கு அல்வா கொடுத்ததாக புகாருக்குள்ளாகி இருக்கும் வாடிப்பட்டி சித்திக்பாய் இவர் தான்..!

ஒரு ஆண்டுக்கு முன்னரே தன்னிடம் பணம் கட்டினால் சரியாக பக்ரித் பண்டிக்கைக்கு முந்தின நாள்... டான்னு ஆட்டு கிடாவை கொண்டாந்து வீட்டுக்கே இறக்கிடுவேன்னு சொல்லி 3 ஆயிரம் பேர்கிட்ட பணம் வசூலித்ததாகவும், அதில் 2024 ஆம் ஆண்டு , பலருக்கு கிடாவை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் புகாருக்குள்ளானவரை மீண்டும் யூடியூப்பில் பேட்டி எடுத்து விளம்பரப்படுத்தி உள்ளார் ஒரு அப்ரண்டிஸ் யூடியூப்பர்.

ஆயிஷாஆட்டுப்பண்ணை வைத்திருப்பதாக கூறிய சித்திக், பஸ் போகாத ஊருக்கு வழி சொன்னதோடு, எல்லாரும் குர்பாணி கொடுக்கனும் அது தான் தனது கொள்கை என்றும் பணத்தை மட்டும் அனுப்புங்க ஆட்டுகிடா உங்க இடத்துகே வந்து டெலிவரி பண்றோமுன்னு மீண்டும் ஆசை வார்த்தையை அள்ளி வீசி இந்த முறை ஏராளமானோருக்கு சூடான அல்வாவை கொடுத்து விட்டு அப்பீட் ஆனதால், குர்பாணி கொடுக்க இயலாமல் பணம் கட்டியவர்கள் தவித்து போயினர்

சிவகங்கை நகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பானி கொடுக்கப்படும் நிலையில் சித்திக் பாயிடம் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததால் வெறும் 100 ஆடுகள் மட்டுமே குர்பானி கொடுக்கப்பட்டது. தென் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பணம் செலுத்தியுள்ள நிலையில் ஏமாற்றப்பட்டதால், அதிக விலை கொடுத்து ஆட்டு கிடாக்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்

தாங்கள் மொத்தமாக ஏமாந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அவரை முதலில் பேட்டி எடுத்து வெளியிட்ட பெண் யூடியூப்பர் தான் என்றும் சித்திக் பாய், கடந்த ஆண்டே இப்படி ஏமாற்றி இருக்கின்றார் என்பதை தெரிவித்திருந்தால் தாங்கள் உஷாராகி இருபோம் என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்

அதற்கு பதில் அளித்த சம்பந்தப்பட்ட பெண் யூடியூப்பரோ, எல்லாவற்றுக்கும் என்னை காரணம் சொல்கிறார்கள், நானே அவரிடம் குர்பானி கொடுப்பதற்கு ஆட்டுகிடா வேண்டும் என்று 8 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி ஏமாந்து விட்டேன் என்று ரசீதை காண்பித்தார்

பல ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகை அன்று குர்பானி கொடுத்த இஸ்லாமியர்கள் இந்த முறை குர்பானி கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக , சித்திக்பாய் மீது தங்கள் பகுதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“ஊருக்குள்ள ஒரு பெண் குழந்தைகூட பொறக்க விட மாட்டீங்கங்கலாடா..”?
 விளாசிய பெண் அதிகாரி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies