BIG STORIES
மஞ்சுமேல் பாய்ஸ் போல் இது மலேசியன் பாய்ஸ் அடித்து உதைத்த வன அதிகாரி..! உடனடியாக இடமாற்றம் உத்தரவு
Jun 08, 2025 03:00 AM
16
மஞ்சுமேல் பாய்ஸ் போல் இது மலேசியன் பாய்ஸ் அடித்து உதைத்த வன அதிகாரி..! உடனடியாக இடமாற்றம் உத்தரவு
மஞ்சுமல் பாய்ஸ் படத்தால், குணா குகையை காண சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில் மலேசிய சுற்றுலா பயணிகளை வனத்துறை அதிகாரிகள் அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் வெளியானதால் , சுற்றுலா பயணிகளை தாக்கிய வனவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
குணாகுகையை சுற்றி பார்க்க ஆர்வத்துடன் வந்த மலேசிய சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட காட்சிகள் தான் இவை..!
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியான நாள் முதல் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு தினமும் ஏராளமான உள் நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த புதன் கிழமை, மலேசியா நாட்டின் கோலாலம்பூர் பகுதியில் இருந்து 6 சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்க்க சுற்றுலா வந்தனர்.
குணா குகையை சுற்றி பார்ப்பதற்கு வெளி நாட்டு பயணிகளுக்கு 100 ரூபாயும், உள் நாட்டு பயணிகளுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், மலேசிய சுற்றுலா பயணிகள் 10 ரூபாய் கட்டணத்தை மட்டும் செலுத்தி, குணா குகைக்கு உள்ளே நுழைந்தனர். அப்போது நுழைவு கட்டண சீட்டுக்களை வேட்டை தடுப்பு தற்காலிக பணியாளர் பாலாஜி ஆய்வு செய்தார்.
சுற்றுலாப் பயணிகளிடம் எங்கிருந்து வந்துள்ளீர்கள் ? என கேட்டதற்கு, மலேசியாவில் இருந்து வந்துள்ளோம் என வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கூறினர்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செல்ல நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் எனவும் நீங்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நுழைவு கட்டணம் தான் செலுத்த வேண்டும் எனகூறி உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகின்றது.
மலேசியா சுற்றுலாப்பயணிகளோ 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எந்த அறிவிப்பு பதாகைகளும் இல்லை எனவே 100 ரூபாய் கட்டணம் என பதாகைகள் உள்ளதை காட்டுங்கள்? என கூறியுள்ளனர். மேலும் நாங்கள் தமிழ் மொழி பேசுகிறோம் எதற்காக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கும்,மலேசியா சுற்றுலாப்பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண் வனவர் மசானம் என்பவர் மலேசியா சுற்றுலாப்பயணிகளில் வயதான பெண்மணி ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது
இதனை வீடியோ எடுத்தவரின் செல்போனையும் பாய்ந்து பறித்து தாக்கிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த சம்பவம் தொடர்பாக காயம் அடைந்ததாக கூறி வனத்துறையினரும், மலேசியா சுற்றுலாப்பயணிகளும் தனி தனியாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தனர்.
இருதரப்பும் சமாதானமாக சென்றதால் போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றனர். கொடைக்கானல் வருகை புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை வனத்துறையினர் தாக்கிய சம்பவத்தால், கொடைக்கானலுக்கு ஆசையுடன் வரும் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை பாதிக்க கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள உள்ளூர் மக்கள் , மலேசியா சுற்றுலாப்பயணிகளை தாக்கிய பெண் வனவர் மீது மாவட்ட வனத்துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட பெண் வனவர் மாசானம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வந்த இவர், 6 ந்தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிடஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வரும் காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க, கட்டணம் குறித்த அறிவிப்புகளை வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu