RECENT NEWS

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

Jun 08, 2025

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்

Jun 08, 2025

BIG STORIES

“ஊருக்குள்ள ஒரு பெண் குழந்தைகூட பொறக்க விட மாட்டீங்கங்கலாடா..”? விளாசிய பெண் அதிகாரி

Jun 08, 2025 03:51 AM

26

“ஊருக்குள்ள ஒரு பெண் குழந்தைகூட பொறக்க விட மாட்டீங்கங்கலாடா..”?
 விளாசிய பெண் அதிகாரி

“ஊருக்குள்ள ஒரு பெண் குழந்தைகூட பொறக்க விட மாட்டீங்கங்கலாடா..”? விளாசிய பெண் அதிகாரி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரகசிய ஸ்கேன் சென்டர் நடத்தி, கர்ப்பிணிகளின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வந்த இருவரை சுகாதாரத்துறை அதிகாரி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் செயல்படும் ஸ்கேன் சென்டர்களில் சட்டவிரோதமாக பாலினம் கண்டறியப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த கும்பலை சேர்ந்த இருவரை மடக்கிப்பிடித்தனர்

சேலம் மாவட்டம் , தலைவாசல் அருகே மணி விழுந்தான் வடக்கு புதூர் பகுதியில் அதிக வாடகை கொடுத்து வீடு எடுத்து அங்கு ரகசிய ஸ்கேன் செண்டர் நடத்தும் ஆசாமிகள் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் மூலம் கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று கண்டறிந்து கூறியது தெரியவந்தது.

பாலினம் குறித்து ஸ்கேன் செய்ததாக சிக்கிய மணிவண்ணன் , பிரசாத் ஆகிய இருவரிடமும், “ உங்களுக்கெல்லாம் சேலம் ஆத்தூரில் ஒரு பெண் குழந்த கூட பிறக்க விடமாட்டீங்கல்ல.”. என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் இணை இயக்குனர் சாந்தி

விசாரணையில் அவர் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை, தனக்கு ஏதும் தெரியாது என்று மழுப்பியவரிடம், நீ தான் கேங்க் லீடர் என்பது தனக்கு தெரியும் என்று கூறிய சாந்தி, பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்

அவர்களிடம் இருந்து 20,000 ரொக்கம், ஸ்கேன் செய்யப்படும் எந்திரம் , செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் இது வரை எத்தனை பேர் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து சென்றனர் என்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் உயரும் தங்க விலையால், பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்க்க போகிறோம் என்ற அச்சம் ஆகியவற்றால் தர்மபுரி மாவட்டத்தில் பின் தங்கிய கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங்கள் மகளின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை ? என்று அறிந்து கொள்ள முயல்வதாகவும், பெண் குழந்தை என்பது தெரியவந்தால் அதனை கலைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

தமிழகத்தில் முன்பு கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை கொன்று புதைத்த கொடூரத்தை மிஞ்சும் வகையில் , கருவிலேயே பெண் சிசுவை கண்டறிந்து கலைக்கும் போக்கு பெருகிவருவதாகவும் அவற்றை தடுக்கவும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“ஊருக்குள்ள ஒரு பெண் குழந்தைகூட பொறக்க விட மாட்டீங்கங்கலாடா..”?
 விளாசிய பெண் அதிகாரி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies