RECENT NEWS

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

Jun 10, 2025

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

Jun 10, 2025

BIG STORIES

அரசு விடுதியில் அரக்கனை காப்பாற்ற முயன்றது யார்..? சிறுமியை சுவற்றில் அடித்த கொடுமை..! கருணையில் வேலை கருணையற்ற செயல்

Jun 10, 2025 01:22 AM

132

அரசு விடுதியில் அரக்கனை காப்பாற்ற முயன்றது யார்..? சிறுமியை சுவற்றில் அடித்த கொடுமை..! கருணையில் வேலை கருணையற்ற செயல்

அரசு விடுதியில் அரக்கனை காப்பாற்ற முயன்றது யார்..? சிறுமியை சுவற்றில் அடித்த கொடுமை..!

சென்னை தாம்பரம் அருகே அரசு விடுதியில் தங்கி இருந்த 13 வயது மாணவி இரு கால்கலையும் முறித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க முயன்றதாக விடுதி கண்காணிப்பாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொடூரனை படம் பிடிக்க விடாமல் அவனது மகன் செய்த அக்கப்போர் காட்சிகள் தான் இவை

சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. 5 நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான தந்தையை இழந்த சிறுமி ஒருவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமி காலில் அடிபட்டுள்ளதாக காலையில் விடுதி கண்காணிப்பாளருக்கு போனில் தகவல் சென்ற நிலையில் அவர் கூறியதன் அடிப்படையில் ஊழியர்கள் சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றதாகவும் மருத்துவர்களிடம் சிறுமி தவறி விழுந்து காயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மருத்துவர் சிறுமியிடம் கால்கள் முறியும் அளவிற்கு என்ன நடந்தது ? என கேட்க சிறுமி சொன்ன பதில் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுதியில் தான் மட்டும் தனியாக விடுதியில் படுத்திருந்தபோது திடீரென முக கவசம் அணிந்து ஜீன்ஸ் பேண்ட் , கோடுகளுடன் கூடிய கட்டம் போட்ட சட்டை போட்டு வந்த நபர் தனது கண் மற்றும் வாயை துணியால் மூடி பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அவனை கண்டு அஞ்சி சத்தமிட்டு ஓட முயன்றதால் தனது இரு கால்களையும் பிடித்து திருகி முறித்ததாகவும், தன்னை அடித்து தாக்கி மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூற மருத்துவர் அதிர்ந்து போனார்

மருத்துவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், சிறுமியை உடல் நிலியைமேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சொன்ன அடையாளங்களோடு இருந்த விடுதி காவலாளி மேத்யூவை போலீசார் அழைத்து சென்று சிறுமியிடம் காட்டியபோது அத்துமீறிய நபர் அவர் தான் என்று சிருமி அடையாளம் காட்டியதாக கூறப்படுகின்றது.

போலீசார் மேத்யூவை முகத்தை மூடி அழைத்துச்சென்று விசாரித்தபோது பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானது. சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான மேத்யூ கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விடுதியில் காவலாளியாக இருந்துள்ளான். மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து இறந்ததால் கருணை அடிப்படையில் அவனுக்கு காவலாளி வேலை கிடைத்துள்ளது. தனது மனைவி 1 வருடத்திற்கு முன்பாக உயிர் இழந்த பின்னர் தனிமையில் வாடியதாக தெரிவித்த மேத்யூ ஞாயிற்று கிழமை காலை மது போதையில் இருந்த போது, சிறுமி தனியாக வருவதை பார்த்து, வாயை பொத்தி தூக்க முயன்றுள்ளான். சிறுமி சத்தம் போட்டு திமிறி ஓட முயன்றுள்ளார், இரண்டாவது முறையாக தூக்கிய போதும் திமிறியதால், அவரை சுவற்றில் தூக்கி அடித்ததாகவும் அந்த கொடூரன் தெரிவித்துள்ளான் என்றும் மயக்கமுற்று கை கால்களில் காயத்துடன் கிடந்த நிலையில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்

விடுதியில் சேர்ந்த போது சிறுமி தனக்கு உறவினர்கள் யாருமில்லை என்று சொன்னதால், சிறுமி நடந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதே போன்று வேறு எந்த மாணவியிடமும் மேத்யூ பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் முதலில் விடுதி ஊழியர்கள் எதற்காக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைத்தனர் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்ட மேத்யூவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன்பாக மருத்துவ பரிசோதனைக்காக , குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, தனது தந்தையை போட்டோ எடுக்காதீர்கள் என மேத்யூவின் மகன் செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டான்

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேத்யூவை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடுதி கண்காணிப்பாளர் ரேவதியிடம் நடந்தது என்ன? என கேள்வி எழுப்பியதற்கு சிறுமி கீழே விழுந்தது மட்டும் தான் தெரியும் என்றும் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே ரொம்ப அலட்சியமாகவே பதில் அளித்தார்.

ஒரு கட்டத்தில் கேள்விகளில் இருந்து தப்பிப்பதற்கு தான் இன்னும் சாப்பிடவில்லை என்றும் விட்டால் மயங்கிவிடுவேன் எனவும் கூறி நழுவியுள்ளார்

வேலியே பயிரை மேய்ந்தது போல காவல் காக்க வேண்டிய காவலாளியே சிறுமியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies