RECENT NEWS

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

Jun 10, 2025

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

Jun 10, 2025

BIG STORIES

மேகாலயா ஹனிமூன் கொலை.. மனைவி சிக்கியது எப்படி..? ரூ.10 லட்சம் நகைகளும் அபேஸ்..! ரிட்டர்ன் டிக்கெட்டால் டுவிஸ்ட்..!

Jun 10, 2025 01:28 AM

645

மேகாலயா ஹனிமூன் கொலை.. மனைவி சிக்கியது எப்படி..? ரூ.10 லட்சம் நகைகளும் அபேஸ்..! ரிட்டர்ன் டிக்கெட்டால் டுவிஸ்ட்..!

மேகாலயா ஹனிமூன் கொலை.. மனைவி சிக்கியது எப்படி..? ரூ.10 லட்சம் நகைகளும் அபேஸ்..!

கணவனை மேகாலயாவுக்கு ஹனிமூன் அழைத்துச்சென்று திட்டமிட்டு மனைவி கொலை செய்தது எப்படி? என்பது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்ற 30 வயது தொழிலதிபருக்கு , சோனம் என்ற 27 வயது பெண்ணுடன் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது கணவன் சிரித்த முகத்துடன் நெற்றியில் குங்குமம் வைக்க உம்மென்று அமர்ந்திருந்தார் மணப்பெண் சோனம்.

தொடர்ந்து மே 20 ந் தேதி மேகாலயாவின் காஷி ஹில்ஸுக்கு புதுமண தம்பதியினர் ஹனிமூன் சென்றனர்.

அங்கு ஹோம்ஸ்டே ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த இருவரும் வாடகைக்கு ஸ்கூட்டர் ஒன்றை எடுத்துக்கொண்டு உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். 23 ஆம் தேதி விடுதியை காலி செய்துவிட்டு புறப்பட்ட இருவரின் போனும் சுவிட்ஜ் ஆப் ஆனது. பின்னர் பல முறை முயற்சி செய்தும் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததால் , ஹனிமூனுக்கு சென்றவர்கள் என்னவானார்கள் ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாப்பிள்ளை வீட்டார், 8 நாட்களுக்குப் பின் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாயமான கணவன் மனைவியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் தேடினர். அப்போது, இருவரும் வாடகைக்கு எடுத்துச்சென்ற ஸ்கூட்டர் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டெடுத்தனர்.

இருவரும் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், ராஜா ரகுவன்ஷியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, அவர் அணிந்திருந்த தங்க வைர மோதிரம், பிரேஸ் லெட் மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகள் காணாமல் போனதால், முதலில் இது கொள்ளைக்காக நடந்த கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அந்தத் தம்பதியினர் பயன்படுத்தியதைப் போன்ற மழைக்கோட்டும் அருகில் ரத்தக் கறை படிந்த கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டது. புது மாப்பிள்ளையின் சடலம் கிடைத்த நிலையில், புதுமணப் பெண் சோனாவிற்கு என்ன ஆனது? என தீவிரமாக தேடி வந்த நிலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சோனம் , உத்தரபிரதேசத்தின் காசிபூர் நகரில் உள்ள தாபா உரிமையாளர் ஒருவரின் செல்போனில் இருந்து அழைத்து தனது சகோதரனிடம் பேசினார். அப்போது ரகுவை தாக்கி போட்டு விட்டு தன்னை சிலர் கடத்தி வந்து இங்கே விட்டுச்சென்றதாக கூறி அழுதார்.

பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சோனம் திட்டமிட்டு ராஜா ரகுவன்ஷியை கொலை செய்து விட்டு கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

மேகாலயாவிற்கு ஏற்கனவே சென்று வந்த அனுபவம் உள்ளதால் அங்கு தான் செல்ல வேண்டும் என்று கூறி டிக்கெட் முன்பதிவு செய்ததே சோனாதான், என்றும் ஹனிமூன் ட்ரிப்க்கு புறப்பட்ட தனது மகனிடம்10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிந்து வரச் சொன்னதும் சோனாதான் என்று கூறிய ரகுவன்ஷியின் தாய் உமா. இருவருக்கும் ஏன் ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவில்லை ? காரணம் முன் கூட்டியே கொலை செய்து விட்டு தலைமறைவாக திட்டமிட்டிருக்கிறார் என்றார்.

சோனம் தனது தந்தையின் பிளைவுட் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த ராஜ் குஷ்வாஹா என்பவனை காதலித்து வந்துள்ளார். சோனாவைவிட ராஜ்குஷ்வாகாவுக்கு 5 வயது குறைவு என்று சொல்லப்படுகின்றது. அவனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் இந்த கொடூர செயலை சோனம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. திருமணத்திற்கு பின்னரும் அவனுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் தான் வீட்டில் தாங்கள் முதலில் காமாக்யா கோவிலுக்கு செல்வதாகவும், பின்னர் ஷில்லாங் செல்ல உள்ளதாகவும் கூறிய சோனம், முன் கூட்டியே காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டபடி மேகாலயாவுக்கு ராஜா ரகுவன்ஷியை அழைத்துச்சென்று தீர்த்துக்கட்டியதாக போலீசார் தெரிவித்தனர். சோனத்திற்கு உதவியதாக உத்தரபிரதேசத்தில் வைத்து ஒருவர் , இந்தூரில் வைத்து இருவர் என கூலிப்படையாக செயல்பட்ட 3 பேரையும் சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் தங்கள் மகள் சோனம் அப்பாவி என்று அவரது பெற்றோர் கூறி வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies