RECENT NEWS

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

Jun 11, 2025

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

Jun 11, 2025

BIG STORIES

விடாக் கண்டனும், கொடாக் கண்டனும்.. 6 மணி நேரம் மல்லுக்கட்டு.. ஓட்டுநர் பரிதாபங்கள்

Jun 10, 2025 04:42 AM

121

விடாக் கண்டனும், கொடாக் கண்டனும்.. 6 மணி நேரம் மல்லுக்கட்டு.. ஓட்டுநர் பரிதாபங்கள்

விடாக் கண்டனும், கொடாக் கண்டனும்.. 6 மணி நேரம் மல்லுக்கட்டு..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள மேல் விஷாரத்தில் கூடுதல் சுங்கவரிக்காக 6 மணி நேரத்துக்கும் மேலாக சரக்கு ஏற்றி சென்ற லாரியை மறித்து வைத்த மர்ம நபர்கள், ஓட்டுனரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரியின் குறுக்கே டூவீலரை நிறுத்தி வைத்து மதியம் துவங்கிய மல்லுக்கட்டு பேச்சுவார்த்தை இரவு வரையில் நீடித்த காட்சிகள் தான் இவை...

ஈரோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராஜ்குமார், பீகாரிலிருந்து தோல் லோடு ஏற்றிக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள மேல் விஷாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு
சென்றுள்ளார். காலையில் லாரி வரும் போதே, மேல்விஷாரம் நகராட்சியில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் நபர், ராஜ்குமாரிடம் 180 வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தனது லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், இதுபோன்று சுங்க வரி செலுத்தக் கூடாது என கூறி விட்டதால் பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார்.

காலையில் தொழிற்சாலைக்குள் சென்று தோல்களை இறங்கி விட்டு மதியம் திரும்பும் போது அந்த லாரியை சுங்கம் வசூலிக்கும் நபர் மறித்துள்ளார். ஆனால், தான் சுங்கம் தர மாட்டேன் என ஓட்டுநர் ராஜ்குமாரும், சுங்கம் தராமல் வண்டியை விட மாட்டேன் அவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

லாரி முன்னோக்கி செல்ல முடியாதவாறு டூவீலரை நிறுத்திக் கொண்டதால் மதியம் சுமார் 2 மணியளவில் துவங்கிய இந்த வாக்குவாதம் நீண்டுக் கொண்டேச் சென்று இரவு 8 மணி வரையில் நீடித்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், இரவு சாப்பாட்டை முடித்து விட்டு லாரிக்குள்ளேயே படுத்துத் தூங்க ராஜ்குமார் தயாராகியுள்ளார். இதனால், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டவே, சங்க நிர்வாகிகளிடம் ராஜ்குமார் பேசியுள்ளார்.

அப்போது, சுங்கவரி செலுத்த அவர்கள் கூறிய நிலையில், 180 ரூபாய் வாங்கி விட்டு 120 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில், மறுபடியும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்குமார் தாக்கப்பட்டதாக கூறப்டுகிறது.

காயமடைந்த ராஜ்குமார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு வந்த ஆம்புலன்சையும் அவர்கள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஓடிச் சென்று ஆம்புலன்சுக்குள் ராஜ்குமார் ஏறிக்கொள்ளவே அவர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லாரி ஓட்டுநரின் பரிதாப நிலை குறித்து ராஜ்குமார் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆண்ட்ரியாவை காண்பித்து மொத்த நகையையும் பறிப்பு.. தொக்கா சிக்கிய தொழில் அதிபர்..! ஆசையா..? மெசேஜ் உங்களுக்கு தான்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies