RECENT NEWS

மாணவி பாலியல் வன்கொடுமை - வீட்டோட மாப்பிள்ளை கைது

மாணவி பாலியல் வன்கொடுமை - வீட்டோட மாப்பிள்ளை கைது

Jun 10, 2025

மாணவி பாலியல் வன்கொடுமை - வீட்டோட மாப்பிள்ளை கைது

மாணவி பாலியல் வன்கொடுமை - வீட்டோட மாப்பிள்ளை கைது

Jun 10, 2025

BIG STORIES

அரசு தங்கும் விடுதியில் சிறுமியை சீரழித்த அரக்கன்.. மறைக்க முயன்ற சார்கள் யார்..? காமுகனின் பகீர் வாக்குமூலம்

Jun 10, 2025 04:53 AM

155

அரசு தங்கும் விடுதியில் சிறுமியை சீரழித்த அரக்கன்.. மறைக்க முயன்ற சார்கள் யார்..? காமுகனின் பகீர் வாக்குமூலம்

அரசு தங்கும் விடுதியில் சிறுமியை சீரழித்த அரக்கன்.. மறைக்க முயன்ற சார்கள் யார்..?

தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... அண்ணா பல்கலை கழக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் பிறப்பித்த பின்னரும், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது வெறி கொண்டு திறியும் காமுக பித்தர்கள் திருந்தியபாடில்லை.. அந்தவகையில் தந்தையை இழந்து தாயை பிரிந்து சமுக நலத்துரையின் கீழ் இயங்கும் அரசு தங்கும் விடுதியில் 13 வயது மாணவி ஒருவர் கொடூரமான முறையில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு பாலிடல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை என்ன ? சிறுமியின் கால்களை முறித்து அத்துமீறிய அரக்கன் யார்..? அந்த போதை மிருகம் சிக்கியதா? இந்த கொடுமைகளுக்கு தீர்வு தான் என்ன ? விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொடூரனை மீடியாக்கள் படம் பிடித்த போது, தனது தந்தையை போட்டோ எடுக்காதீர்கள் என செய்தியாளர்களிடம் அவனது மகன் தகராறு அக்கப்போர் அரங்கேறியதும் அவனது முகத்தை ஊரார் பார்த்து விடகூடாது என்பதற்காகத்தான்.,.

சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல் பட்டு வருகிறது. 5 நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான தந்தையை இழந்த சிறுமி ஒருவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமி காலில் அடிபட்டுள்ளதாக காலையில் விடுதி கண்காணிப்பாளருக்கு போனில் தகவல் சென்ற நிலையில் அவர் கூறியதன் அடிப்படையில் ஊழியர்கள் சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றதாகவும் மருத்துவர்களிடம் சிறுமி தவறி விழுந்து காயம் அடைந்ததாகவு தெரிவித்துள்ளனர். மருத்துவர் சிறுமியிடம் கால்கள் முறியும் அளவிற்கு என்ன நடந்தது ? என கேட்க சிறுமி சொன்ன பதில் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுதியில் தன்னுடன் தங்கி இருந்த மற்ற மாணவிகள் வீட்டுக்கு சென்ரு விட்ட நிலையில் தான் மட்டும் தனியாக விடுதியில் படுத்திருந்தபோது திடீரென முக கவசம் அணிந்து ஜீன்ஸ் பேண்ட் , கோடுகளுடன் கூடிய கட்டம் போட்ட சட்டை போட்டு வந்த நபர் தனது கண் மற்றும் வாயை துணியால் மூடி பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

அவனை கண்டு அஞ்சி சத்தமிட முயற்சித்ததால் தனது இரு கால்களையும் பிடித்து திருகி உடைத்ததாகவும், தன்னை அடித்து தாக்கி மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தச் சிறுமி கண்ணீர்மல்க கூறியதை கேட்டு மருத்துவர் அதிர்ந்து போனார்

மருத்துவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், சிறுமியை உடல் நிலியைமேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சொன்ன அடையாளங்களோடு இருந்த விடுதி காவலாளி மேத்யூவை போலீசார் அழைத்து சென்று சிறுமியிடம் காட்டியபோது அத்துமீறிய நபர் அவர் தான் என்று சிருமி அடையாளம் காட்டியதாக கூறப்படுகின்றது.

போலீசார் மேத்யூவை முகத்தை மூடி அழைத்துச்சென்று விசாரித்தபோது பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானது. சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான மேத்யூ கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விடுதியில் காவலாளியாக இருந்துள்ளான். மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து இறந்ததால் கருணை அடிப்படையில் அவனுக்கு காவலாளி வேலை கிடைத்துள்ளது.

சம்பவத்தன்று மேத்யூ மது போதையில் சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில், பண்டிகை விடுமுறைக்காக மற்ற மாணவிகள் வீட்டுக்கு சென்று விட்டதால், ஐந்து நாட்களுக்கு முன்பு விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுமி தனக்கு உறவினர்கள் யாருமில்லை என்று சொன்னதை சாதகமாக்கி உள்ளான். சிறுமி நடந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதே போன்று வேறு எந்த மாணவியிடமும் மேத்யூ பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மேத்யூவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல் நிலையத்திலிருந்து போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, தனது தந்தையை போட்டோ எடுக்காதீர்கள் என மேத்யூவின் மகன் செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிக்கப்பட்டு மேத்யூவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடுதி கண்காணிப்பாளர் ரேவதியிடம் நடந்தது என்ன? என கேள்வி எழுப்பியதற்கு சிறுமி கீழே விழுந்தது மட்டும் தான் தெரியும் என்றும் பல கேள்விகளுக்கு தெரியாது என அலட்சியமாக பதில் கூறியுள்ளார். கேள்விகளில் இருந்து தப்பிப்பதற்கு தான் இன்னும் சாப்பிடவில்லை விட்டால் மயங்கிவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்தது போல காவல் காக்க வேண்டிய காவலாளியே சிறுமியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதி கண்காணிப்பாளர் அலட்சியமாக பதில் கூறி இருந்த நிலையில் அரசு விடுதியில் தங்கியிருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக பல்வேறு கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேத்யூ உடனடியாக கைது செய்யப்பட்டிருபதாகவும் , அவன் வேறு எந்த சம்பவங்களிலும் ஈடுபட வில்லை என்றும் இனி பெண்கள் தங்கும் விடுதிக்கு பெண்களையே பாதுகாவலாளிகளாக நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்

அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்கும் விதமாக தவறி விழுந்ததாக நாடகமாடிய விடுதி ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவன் மட்டுமல்ல அதனை மறைத்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற சார்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு மது மற்றும் கஞ்சா போதை முக்கிய காரணமாக உள்ளது என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் அண்மையில் சென்னையில் பணிக்கு சென்று விட்டு தனியாக வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியவனும் போதையில் செய்து விட்டதாக தான் கூறி இருக்கின்றான். குற்றங்கள் பெருக ஊக்க மருந்தாக இருக்கும் போதையை முழுமையாக கட்டுப்படுத்ததவரை இந்த கொடுமைகள் ஓயாது என்கின்றனர் வேதனையுடன்

வேலையில் செய்தாலும்... போதையில் செய்தாலும்.. குற்றம் கேடு தரும்..!


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies