அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!
Jun 12, 2025
முகப்பு
ஏன் சாலையில் குழி தோண்டுறீங்க?.. தலையில் காயத்துடன் போராட்டம்.. பிங்க் ஆட்டோ பெண்மணி ஆவேசம்..! போலீசாரை விமர்சித்ததால் பரபரப்பு
Jun 10, 2025 11:50 AM
111
பிங்க் ஆட்டோ பெண்மணி ஆவேசம்
சென்னை கதீட்ரல் சாலையில் குடிநீர் குழாய்க்காக தோட்டப்பட்ட பள்ளத்தில் பிங் ஆட்டோ விபத்தில் சிக்கியதால் அதனை ஓட்டி வந்த பெண் , தலையில் ஏற்பட்ட காயத்துடன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மெட்ரோ வாட்டர் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழியில் சிக்கி ஆட்டோ நிலை தடுமாறி விபத்தில் சிக்கியதால், அதனை சரி செய்ய தவறியதாக அரசு நிர்வாகத்துக்கு எதிராக தலையில் காயத்துடன் பெண் ஆட்டோ ஓட்டுனர் ஆவேசமான காட்சிகள் தான் இவை..!
சென்னை அண்ணாசாலை அடுத்த பாடர் தோட்டத்தை சேர்ந்தவர் செம்பருத்தி பிங்க் ஆட்டோ ஓட்டிவருகின்றார். செவ்வாய் கிழமை காலை பயணி ஒருவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, அண்ணா ரோட்டரி மார்க்கத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை நோக்கி சென்றார். கதீட்ரல் சாலையில் இருந்து கஸ்தூரி ரங்கன் சாலைக்கு ஆட்டோவை திருப்ப முயற்சித்த போது மெட்ரோ வாட்டர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு தோண்டி தற்காலிகமாக மூடப்பட்ட குழியில் ஆட்டோவின் முன்பக்க சக்கரம் சிக்கியது.
அதில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலை தடுப்பில் வேகமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்தவருக்கு காலிலும் ஆட்டோவை ஓட்டிவந்த செம்பருத்திக்கு தலையிலும் அடிபட்டு ரத்தம் வழிந்தது.
செம்பருத்தி காயத்துடன் அமர்ந்திருந்த நிலையில், சில போலீசார் வந்து அவரது ஆட்டோவை தூக்கி சாலையோரம் கொண்டு சென்றனர்
அப்போது சாலையில் தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் தான், தனது ஆட்டோ விபத்தில் சிக்கியதாக கூறிய செம்பருத்தி ஆட்டோவை சரி செய்ய அரசு நிவாரணம் தர வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தலையில் ஹெல்மெட் போடாமல் போனா நிறுத்தி அபராதம் போடறீங்க இல்ல, சாலையில் குழியை தோண்டி போட்டவங்களுக்கு என்ன அபராதம் ? என்றும் இதற்கு யார் பொறுப்பு? என்னோட ஆட்டோவை யார் சரி செய்து தருவாங்க? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீசாரை திக்குமுக்காட வைத்தார்.
தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போகமாட்டேன் என்று தலையில் வழிந்த ரத்ததுடன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கண்ட இடத்தில் எல்லாம் பேரிகார்டு போட்டு வைக்கறீங்க இல்ல, சாலையில் பள்ளம் இருக்கின்றது என்று பேரிகார்டு போட்டு வைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் போலீசாரை விழிபிதுங்க வைத்தது.
அதே நேரத்தில் மெட்ரோ குழாய் பணிகளுக்கு தோட்டப்பட்ட குழிகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே குடிநீர் குழாய் பணிகளுக்காக குழிகள் தோண்டினால் அந்த பள்ளம் கான்கிரீட் கொண்டு மூடப்பட வேண்டும் என்ற விதி ஒப்பந்த நிபந்தனைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu