அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!
Jun 12, 2025
BIG STORIES
"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!
Jun 10, 2025 04:07 PM
1038
தம்பதியை தாக்கி அடாவடித்தனம்
நள்ளிரவில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளம் தம்பதியினரிடம் பேருந்து ஊழியர்கள் உச்சக்கட்ட அடாவடித்தனத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி காட்சிகள் தான் இவை..
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வன் - ஆன்சி தம்பதியினர் தனது குழந்தை மற்றும் தம்பி குடும்பத்தினரோடு கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்வதற்காக ஸ்ரீ எஸ்.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
பேருந்து கிளம்பாக்கம் சென்றதும், செல்வன் தனது குழந்தைக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக பேருந்து ஓட்டுனரிடம் கேட்டு விட்டு அவரது மைத்துனரோடு பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சிறிது நேரத்தில் ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கிய போது, "தனது கணவர் வந்துவிடுவார் பேருந்தை நிறுத்துங்கள்" என ஆன்சி கூச்சலிட்டுள்ளார். அதற்கு பேருந்து ஓட்டுநர் "வேற பஸ்ல வர சொல்லு" என திமிராக கூறி பேருந்தை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் பேருந்து ஊரப்பாக்கம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. செல்வனும் அவரது மைத்துனரும் ஆட்டோ பிடித்து வந்து அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த செல்வன் "உங்ககிட்ட சொல்லிட்டு தான போனேன், ஏன் வேண்டிய எடுத்தீங்க" என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்து ஊழியர்களுக்கும் செல்வனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரவு உணவிற்காக பேருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது திடீரென இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியோடு வந்த பேருந்து ஊழியர்கள் செல்வன் குடும்பத்தினரையும் அவருடன் வந்த அவரது மைத்துனரையும் கடுமையாக தாக்கி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டபோதே பேருந்தை காவல் நிலையத்திற்கு விடுங்கள் என்றுதானே சொன்னோம் என்று ஆன்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காயமடைந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேருந்து ஊழியர்கள் செல்வகுமார், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை 10 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே அடாவடித்தனம் செய்த பேருந்து ஊழியர்களையே மீண்டும் பேருந்தை இயக்கி சென்றதால் பேருந்தில் பயணித்தவர்கள் பெரும் பீதியில் இருந்துள்ளனர்.
அப்போது பேருந்து விருதுநகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது கார் ஒன்றை உரசியதில் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பயணிகளை வைத்துக்கொண்டு இப்படி தான் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவியா? என பேருந்து ஓட்டுனரிடம் கார் ஓட்டுநர் வாக்குவாதம் செய்துள்ளார்.
பயணிகளை அடித்து உதைத்து அடாவடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்டிக்காமல் அதே பேருந்தில் அனுப்பி வைத்ததால் கார் விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தனியார் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu