RECENT NEWS

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

Jun 13, 2025

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

Jun 13, 2025

முகப்பு

பற்றி எரியும் அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்..

Jun 12, 2025 02:18 AM

2501

பற்றி எரியும் அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்..

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றும், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் கலவரம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.

கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அமெரிக்கா முழுவதும் நாள்தோறும் 3ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர்.

அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, அதிபர் டிரம்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது, லாஸ் ஏஞ்சலஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.

போராட்டக்காரர்கள் மீது லாஸ் ஏஞ்சலஸ் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தை தற்போது போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அமெரிக்க அரசு சார்பில் தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் கடற்படையை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், கலிபோர்னியா தலைவர்களான ஆளுநர் கேவின் நியூஸம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோர் ட்ரம்பின் தலையீட்டை கடுமையாக கண்டித்துள்ளனர். இது சர்வாதிகாரமானது மற்றும் சட்டவிரோதமானது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இருப்பினும் வன்முறையைத் தடுக்கவும், கூட்டாட்சி அரசை பாதுகாக்கவும் இது அவசியம் என்று டிரம்ப் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். ஆனால் அமெரிக்காவில் உள்ள சட்டப்படி இது தவறான நடவடிக்கை என கூறப்படுகிறது. அதாவது கவர்னர் அனுமதி இல்லாமல் டிரம்ப் அனுப்பிய படைகளால் உள்நாட்டு கலவரம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தற்போது லாஸ் ஏஞ்சலஸ் நகரை தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோ நகருக்கும் கலவரம் பரவியுள்ளது. அங்கு வாழும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சாலை, தெருக்களில் ஆங்காங்கே கூடி நின்று, அதிபர் டிரம்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். சான் பிரான்சிஸ்கோவிலும் ஏராளமான வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பகுதிகளிலும் கலவரம் பரவுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து போராடிவரும் நிலையில், அவர்கள் அனைவரையும் கைது செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies