மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
தமிழ்நாடு
''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!
Jun 12, 2025 09:23 AM
161
''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...''
2026 சட்டமன்ற தேர்தல் வரை பா.ம.க.வின் தலைவர் பதவியில் தானே நீடிப்பேன் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகளும், தொண்டர்களும் தன் பக்கமே இருப்பதால், செயல் தலைவர் பொறுப்பை அன்புமணி ஏற்பதே பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் எனவும் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் காலாவதி ஆகிவிட்டதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணியுடன் அதிகார மோதல் நீடித்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அன்புமணிக்கும் தனக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும் அந்த பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டதாகவும் கூறினார். கட்சியில் எல்லாம் எனக்கே வேண்டும் என அன்புமணி கூறிவருவதால், நீயா நானா என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
தன்னை கட்சியில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல் அன்புமணி செயல்படுவதாகவும், தன்னை மானபங்கம் செய்வது போல் அன்புமணி நடந்து கொள்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
உயிருடன் உள்ள தன்னை உதாசீனம் செய்துவிட்டு தனது படத்தை வைத்து உற்சவம் செய்வதாகவும், தன்னை நடைபிணமாக்கிவிட்டு அன்புமணி நடைபயணம் போவதாகவும் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை அன்புமணி உணர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என தான் கூறியபோதும், தன்னிடம் கெஞ்சி, கூத்தாடி மக்களவை தேர்தலின்போது சவுமியாவை அன்புமணி தருமபுரிக்கு வேட்பாளராக்கியதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் அன்புமணியை விமர்சித்த நிர்வாகியை கையில் துப்பாக்கி இருந்திருந்தால் அவர் சுட்டிருப்பார் என பகிரங்க குற்றச்சாட்டையும் ராமதாஸ் முன்வைத்தார்.
முன்பு அன்புமணியை அவ்வளவு எளிதாக யாரும் பார்க்க முடியாது, ஆனால் தற்போது வாங்க பிரியாணி சாப்பிடலாம் என நிர்வாகிகளை அவர் கூவிக்கூவி அழைப்பதாகவும் ராமதாஸ் விமர்சித்தார்.
கட்சியின் தலைவர் மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என விளக்கமளித்த ராமதாஸ், பொதுக்குழுவை நிறுவனரான தாமே கூட்டுவேன் என திட்டவட்டமாக கூறினார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியில் யாருடன் பேச வேண்டும் என மாற்றுக்கட்சியினருக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
விஜயின் த.வெ.க.வுடன் தற்போது வரை கூட்டணி பற்றி பேசவில்லை, எதிர்காலத்தில் அக்கட்சியுடன் பேசுவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ராமதாஸ் விளக்கமளித்தார்.
முன்னதாக, பா.ம.க.வின் பொதுச்செயலாளரான வடிவேல் ராவணனை காணவில்லை என கூறிய ராமதாஸ், அவர் 7 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர் மிதந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu