முகப்பு
காவல்துறை மாநகராட்சி அனுமதியின்றி பிரமாண்ட இரும்பு மேடை... தாவூதி போரா அமைப்பினர் கொடுத்த விளக்கம்
Jun 13, 2025 04:37 PM
110
அனுமதியின்றி பிரமாண்ட இரும்பு மேடை
சென்னை பாரிமுனையில் உள்ள மூர் தெருவில் போரா முஸ்லீம்களின் மதகுருவின் பிரசங்கத்துக்காக, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பெரிய இரும்பு ராடுகளை கொண்டு, தெருவை ஆக்கிரமித்து அனுமதியின்றி மேடை அமைக்கும் பணி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் தாவூதி போரா அமைப்பினர் கூறும் போது, முகராம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு வருவோர் மழை, வெயிலில் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக பலமான பந்தல் அமைப்பதாக தெரிவித்தனர்.
வருகிற 26 ந்தேதியில் இருந்து ஜூலை 6ந்தேதி வரை நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் தங்கள் மதகுருவான செய்யதுனா முபட்டல் ஷப்பியூதீன் என்பவரின் பிரசங்கத்தை கேட்க, உலகம் முழுவதுமிருந்து 43 ஆயிரம் பேர் பங்கு பெற இருப்பதாகவும் , முறையான அனுமதி பெற்றே பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தனர்.
வடக்கு கடற்கரை துணை ஆணையரிடம் அனுமதி கேட்டு 11 ந்தேதி மனு கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல மாநகராட்சி நிர்வாக பொறியாளர் லோகேஷும் தங்கள் தரப்பில் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu