RECENT NEWS

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Jun 14, 2025

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Jun 14, 2025

முகப்பு

என்னடா செஞ்சீங்க.. 10 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமானதால் அதிர்ச்சி..!

Jun 14, 2025 02:02 AM

2366

என்னடா செஞ்சீங்க.. 10 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமானதால் அதிர்ச்சி..!

சீ.. சீ.. அந்த மாணவி செல்போனில் சீ.. சீ... போதையில் கர்ப்பமான அரசு பள்ளி மாணவி

பலரது வாழ்க்கையில் காதல் மலரச்செய்து .. முடிவில் இம்சையை கூட்டி வரும் இன்ஸ்டாகிராம் போல, சின்னஞ் சிறுசுகளின் சாட்டிங் பொழுதுபோக்கு செயலியான ஸ்னாப் சாட் பலரது வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் குட்டிச்சாத்தானாக மாறி உள்ளது.

அந்தவகையில் ஸ்னாப் சாட்டில் அறிமுகமான ஆண் நண்பருடன் பழகி காதலில் விழுந்து போதைக்கு அடிமையான 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமான சம்பவம் பெற்றோருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது...

சென்னை புரசைவாக்கத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்து வரும் ஆசிரியை ஒருவரின் மகளான அந்த மாணவி, அரசு பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்த நிலையில் மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக தாயிடம் கூறினார். தொடர்ந்து உடல் நலக்கோளாறும் ஏற்பட்டிருக்கின்றது.

மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆசிரியை சென்னை எழுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த போது மாணவி பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்தியதாலும், கர்ப்பமாகி அந்த கருவை மாத்திரை சாப்பிட்டு கலைத்ததாலும் அவருக்கு உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததால் , தலையில் இடிவிழுந்தது போன்ற அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் ஆசிரியை.

மருத்துவர்களின் தகவலின் பேரில் அந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் விசாரித்த போது , ஸ்னாப் சாட்டில் அறிமுகமான உறவுக்கார இளைஞர் லியோ என்பவர், துபாயில் இருப்பதாக கூறி பழகியதாகவும். அவருடன் சாட்டிங்கில் காதல் மலர்ந்த நிலையில் , திடீரென ஒரு நாள், தான் சென்னைக்கு வந்திருப்பதாக கூறி தன்னை சந்தித்து மணலியில் உள்ள உறவினர் வீட்டு அழைத்துச்சென்று போதை பொருளை கொடுத்து தன்னுடன் பல முறை நெருக்கமாக இருந்ததால் தான் கர்ப்பமானதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து லியோவை தேடிய போது அவன் அடிதடி வழக்கில் சிக்கி வேப்பேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. அந்த மாணவியின் நடவடிக்கை போதைக்கு அடிமையானது போல இருந்ததால் அவரது நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டு மாடியில் மேல் தளத்தில் , தாத்தா மற்றும் தாய் இருக்கும் நிலையில் முதல் தளத்தில் இருந்த மாணவியை சந்திக்க மர்ம நபர் ஒருவர் வந்து செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த நபரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்த போது, லியோவால் போதை பழக்கத்துக்கு அடிமையான அந்த மாணவிக்கு போதை பொருள் கொடுப்பது போல வந்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட லியோவின் கூட்டாளியான பிரசாந்த் என்பது தெரியவந்தது. அந்த மாணவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் அதனை வாங்கி விசாரித்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவியின் செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்தது. அவை அனைத்தும் அந்த மாணவி லியோ மற்றும் பிரசாந்துடன் தனிமையில் இருந்ததை போதை முற்றிய நிலையில் வீடியோக்களாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அந்த மாணவியை போதையின் பிடியில் இருந்து விடுவிக்க , மறுவாழ்வு மையத்தில் வைத்து கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த விபரீத சம்பவம்..!

அதே நேரத்தில் போதைக்கு அடிமையானதால் மாணவியின் நடவடிக்கைகள் தான் என்ன செய்கிறோம் என்று உணராதவகையில் இருந்துள்ளது. தான் செய்வது சரியா ? தவறா ? இப்படி செய்கிறோமே என்ற எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் இந்த செயலில் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இன்றைய இளையதலைமுறையினரில் சிலர் அனுபவித்து பார்ப்போமே என்று வயதுக்கு மீறிய செயல்களால் ஈர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் போலீசார், போதை பழக்கம் ஒரு போதும் புதிய அனுவபத்தை தராது, உங்களில் வாழ்க்கையை சீரழித்துவிடும் உஷாராக இருக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அட கடவுளே... மனைவியின் கடைசி ஆசை... அஸ்தியை கரைக்க 
வந்தவருக்கு இப்படி ஆகவேண்டுமா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies