RECENT NEWS

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Jun 14, 2025

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Jun 14, 2025

முகப்பு

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு சம்பவம்; திணறும் போலீஸ்..!

Jun 14, 2025 02:06 AM

406

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

சென்னை அரசு மருத்துவமனையில் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு சம்பவம்; திணறும் போலீஸ்!

“நீதான் இங்க டாக்டரா?”

“அஃப்கோர்ஸ்”

“குளுக்கோஸா?”

“அஃப்கோர்ஸ்ங்க... அஃப்கோர்ஸுன்னா ஆமான்னு அர்த்தம். யூ டோன் நோ இங்கிலீஸ்? வாட் நான்சென்ஸ் யுவர் டாக்கிங்... அவுட் பேசண்டை அட்டெண்ட் பன்றதும்... இன்னர் பேசண்டை ஆபரேஷன் பண்ணி அனுப்புறதும்... மொத்தத்துல ஆம்பளையிலிருந்து பொம்பளைவரைக்கும் ஆல் அட்டெண்ட் மி இந்த சிங்காரம் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்” என்கிற வடிவேலு காமெடிபோல ஒருவர், தமிழ்நாட்டின் தலைநகர மருத்துவமனையான ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், டிப் டாப்பாக உலாவி, வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் எல்லாம் வழங்கியதோடு, நோயாளியிடம் தங்கச்சங்கிலியை திருடி, எஸ்கேப் ஆன பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவருடைய மாமியார் சுந்தரவள்ளி, முதுகு தண்டு பிரச்சனை தொடர்பாக கடந்த 4 ஆம் தேதி சென்னை செண்ட்ரலிலுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் டாக்டர் போலவே கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு, டவர் மூன்றில் உள்ள 3 வது மாடிக்கு சென்றுள்ளார். நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் நுழைந்தவர், அங்குள்ள கேஸ் ஷீட்டை எடுத்துக்கொண்டு நோயாளிகளிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன செய்கிறது? என்பது தொடர்பாக விசாரித்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

இதனை நம்பிய காஞ்சனா குடும்பத்தினர், அவரிடம் மருத்துவ சந்தேகங்களை கேட்டுள்ளனர். மேலும் அந்த போலியான மருத்துவர், அவர்களுக்கு அறிவுரை வழங்கியவுடன், மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போதே சந்தேகப்பட்டிருக்கவேண்டாமா?

இதனை அடுத்து போலி மருத்துவர், அவர்களை “வாங்களேன் டீ சாப்பிடலாம்” என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எந்த அரசு மருத்துவர், முன் பின் தெரியாத நோயாளிகளின் அட்டெண்டரை எல்லாம் இவ்வளவு அக்கறையாக டீ குடிக்க அழைத்து சென்றுள்ளார்? மருத்துவ வரலாற்றில் இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கிறதா? அப்போதாவது,சந்தேகப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனாலும், அப்பாவி காஞ்சனா குடும்பத்தினர் நம்பி சென்றுள்ளார்.

அங்கு, தேநீர் வழங்கும் மாஸ்டரிடம், தான் மருத்துவர் எனவும் இவர்களுக்கு தேநீர் கொடுங்கள் எனவும் கூறியுள்ளார். டீ மாஸ்டரும் அவர்களுக்கு தேநீர் வழங்கி உள்ளார்.

இதனை அடுத்து, மதியம் உணவு இடை வேளைக்கு செல்லும்போது, அதே போலி மருத்துவர், உணவு அருந்தும் ஏசி அறைக்கு அழைத்துச் சென்று உணவுகளையும் சாப்பிட வைத்துள்ளார். இதனை எல்லாம் பார்த்த காஞ்சனா குடும்பத்தினர், மிகவும் அக்கறை காட்டும் டாக்டர் என நம்பி அவர் சொன்ன அனைத்தையும் தவறாமல் கேட்டுள்ளனர்.

இதெல்லாம் முடிந்தபிறகு, இரவு 10 மணி அளவில் மருத்துவர் உட்காரும் அதே நாற்காலியில் உட்கார்ந்து, அனைத்து கேஸ் ஷீட்டுகளையும் சரி பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக சுந்தரவள்ளியிடம், “நாளை உங்களுக்கு அறுவை சிகிச்சை இருக்கிறது. காலையில் தயாராக இருங்கள் நான் வருகிறேன்” என கூறிவிட்டு மிடுக்காக சென்றுள்ளார். இதனிடையே காஞ்சனா “சார் எனக்கும் தலைவலி இருக்கு. தினமும் ரொம்ப அவஸ்தைப் படுறேன். என்ன செய்வது? என தெரியவில்லை” என கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த போலி மருத்துவர், “நாளை ஸ்கேன் செய்து பார்த்து விடலாம்” என கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து, ஐந்தாம் தேதி வியாழக்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில், மீண்டும் அதே டவர் 3 என்கிற இடத்திற்கு வந்து அவர்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் கேஸ் ஷீட்டை எல்லாம் சரி பார்த்து விட்டு, கல்லீரல் ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறி, ஏழாவது மாடிக்கு காஞ்சனாவையும் அவரது மாமியார் சுந்தரவள்ளியையும் அழைத்து சென்றுள்ளார். அந்த டவருக்கு அழைத்துச் சென்றவுடன், ஸ்கேன் எடுக்கும்போது, நகைகள் அணிந்திருக்கக்கூடாது எனவும் அவர், அக்கறையோடு கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய காஞ்சனா குடும்பத்தினர், கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகை, செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டுள்ளனர்.

அப்போது, இந்த பையை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்திய அந்த நபர், “நான் என்னுடைய அறையில் வைத்து விட்டு வருகிறேன்” எனக் கூறி அந்தப் பையை எடுத்துச் சென்றுள்ளார். அறைக்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றவர்தான். அதற்குப்பிறகு அவரை காணவே இல்லை.

இப்பொழுது வருவார்... அப்பொழுது வருவார்... என வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த காஞ்சனா மற்றும் மாமியார் சுந்தரவள்ளி குடும்பத்தினர் எதிர்பார்த்து, எதிர்பார்த்து, மருத்துவர் வரவில்லை என்பது தெரிந்த உடன், மீண்டும் அவர்களுடைய இடத்திற்கே சென்றுள்ளனர்.

சினிமா க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் போல, ஒரிஜினல் மருத்துவர் அப்போதுதான் வந்து பார்த்துள்ளார். நடந்தவற்றை அவரிடம் கூறியுள்ளனர். அப்போதுதான், அப்படிப்பட்ட ஒருவர் அங்கு மருத்துவராகவே இல்லை என்பதும் வந்தவர் மருத்துவரே இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் நகைகள் திருடு போனதை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் காஞ்சனா புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள போலீசார் டவர் 3 மற்றும் ஏழாவது மாடியில் இருக்கக்கூடிய கல்லீரல் டவர் ஆகியவற்றில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

சிசிடிவி காட்சியில் வந்த மர்ம நபர் முகக் கவசம் அணிந்தபடி, கழுத்தில் ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு சுற்றி திரிந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே மருத்துவர்கள் எப்படி காப்பீடு கேட்பார்களோ அதே போன்று தங்களிடம் காப்பீடு திட்டம் இருக்கிறதா? என கேட்டுவிட்டு அவர் ஒரு மின்னஞ்சலையும் கொடுத்திருக்கிறார். இந்த மின்னஞ்சலுக்கு தங்களுடைய தகவல்களை அனுப்புங்கள் நான் எடுத்து தருகிறேன் என வாக்குறுதியும் கொடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காஞ்சனா குடும்பத்தினர் கொடுத்த புகாரில், வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற போலி மருத்துவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்று சொல்லக்கூடிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர் போல வேடம் அணிந்து, நோயாளிடம் இருந்து நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான்கு நாட்களாகியும் சிசிடிவி காட்சியில் மர்ம நபரின் புகைப்படம் இருந்தும் போலி மருத்துவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அட கடவுளே... மனைவியின் கடைசி ஆசை... அஸ்தியை கரைக்க 
வந்தவருக்கு இப்படி ஆகவேண்டுமா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies