முகப்பு
"இறந்ததாக நினைத்தேன்" விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொன்ன பரபரப்பு தகவல்..! திக்..திக்..நிமிடத்தில் நடந்தது என்ன?
Jun 14, 2025 04:12 AM
196
விமான விபத்தில் உயிர் பிழைத்தது எப்படி? அந்த நேரத்தில் அங்கு என்ன நடந்தது ?
அகமதாபாத் விமான விபத்தில் 242 பேர் உயிரிழந்த நிலையில், அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய பிரிட்டிஷ் குடிமகன் விஸ்வாஸ் குமார் ரமேஷ் இவர் தான்..
லண்டனில் 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரமேஷ் விஸ்வாஸ் குமார், இந்தியாவில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்து விட்டு சகோதரர் அஜய் குமாருடன் லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார்.
விமானத்தில் அவசர கதவுக்கு அருகில் 11 ஏ இருக்கையில் ரமேஷ் பயணம் செய்துள்ளார். இந்த இருக்கையானது மற்ற இருக்கைகளை விட சற்று இடைவெளி அதிகம் உள்ளது என கூறப்படுகிறது.
விபத்தில் இருந்து உயிர் பிழைத்த ரமேஷ் , காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தான் உயிர் பிழைத்தது எப்படி? என்பது குறித்து விவரித்துள்ளார்.
விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. நான் பயணித்த சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழியை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. சீட் பெல்ட் அணியாமல் தயாராக இருந்ததாகவும், பக்கத்தில் இருந்த கதவு உடைந்திருந்ததால் வெளியேற வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
“என்ன நடந்தது என்று சுதாகரித்துக் கொள்வதற்குள் என்னை சுற்றி உடல்களும், விமான துண்டுகளும் கிடந்தன. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. எழுந்து ஓடினேன். யாரோ ஒருவர் என்னை பிடித்து அழைத்து வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் என அவர் கூறியுள்ளார்.
மேலும் தான் பிழைத்துவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன், மக்கள் என் கண்முன்னே இறந்து கிடந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரமேஷ் உயிர் பிழைத்ததற்கு 11 ஏ இருக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விமானத்தில் அவருடன் பயணித்த 19ஏ இருக்கையில் இருந்த அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஷை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu