முகப்பு
"அழகா இல்லையா..? அவனை எரிச்சுப்புட்டேன்" திகில் கிளப்பிய மனைவி தலைகீழாக மாற்றிய தகாத உறவு
Jun 14, 2025 06:49 AM
117
நடுத்தெருவிற்கு கொண்டு வந்த கள்ளக் காதல்..! கைதான மனைவியின் பகீர் வாக்குமூலம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள நேருபுரம் கிராமத்தை சேர்ந்த 47 வயதான ரங்கசாமி என்ற விவசாயிக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த திங்கள்கிழமையன்று இரவு 11 மணியளவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி அலறும் சத்தம் கேட்டு அவரது மகளும் மகனும் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது ரங்கசாமி உடல் முழுவதும் தீ பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்துபோன இருவரும், தீயை அணைத்து ரங்கசாமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ரங்கசாமியின் மனைவி கவிதா தலைமறைவானார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கசாமி, சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டினம் போலீசார் தலைமறைவான கவிதாவை தேடி வந்தனர்.
கடந்த வியாழக்கிழமையன்று கவிதாவின் உறவினருக்கு கவிதா போனில் பேசியது தெரியவந்தது. மொபைல் எண்ணின் சிக்னலை வைத்து தேடிய போலீசார் அவர் திருப்பதியில் தங்கியிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து திருப்பதியில் பதுங்கி இருந்த கவிதாவை போலீசார் கைது செய்தனர்.
கவிதாவிடம் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருமணமாகி 22 ஆண்டுகளாக சொத்து, பணம், நகைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்த கவிதா,
தனது கணவருக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவரோடு தவறான உறவு இருந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது கணவரை கவிதா எச்சரித்தும் அவர் கேட்காமல் மஞ்சுளாவோடு தகாத உறவை தொடர்ந்ததாகவும், வீட்டில் இருந்த 80 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சளாவிற்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நிலத்தை விற்று அந்த பணத்தையும் மஞ்சுளாவிடம் கொடுத்ததாக கவிதா தெரிவித்துள்ளார். இதனால் சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே கணவர் வீட்டிற்கு வருவதாகவும், அப்போதும் குடித்துவிட்டு "நீ அழகா இல்ல, நீ அசிங்கமா இருக்கிற, நீ எல்லாம் எதுக்கு என்கூட இருக்கிற" என்று சொல்லி ஆபாசமாக திட்டியும் அடித்தும் டார்ச்சர் செய்து வந்ததாக கவிதா தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று வீட்டிற்கு குடித்து விட்டு வந்த ரங்கசாமி, கவிதாவை காலால் உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்த கவிதா, ஆத்திரத்தில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஒரு போர்வையை விரித்து விவசாய நிலத்தில் மருந்து தெளிப்பதற்காக வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட கவிதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu