3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஈரான் மோதல்
Jun 15, 2025
முகப்பு
அட கடவுளே... மனைவியின் கடைசி ஆசை... அஸ்தியை கரைக்க வந்தவருக்கு இப்படி ஆகவேண்டுமா?
Jun 14, 2025 06:59 AM
261
மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவர் விமான விபத்து; துடி துடிக்க வைத்த பெரும் சோகம்!
உலக இதயங்கைளையே உருக்குலையச் செய்த, மாபெரும் விமான விபத்தில், ஒவ்வொருவரின் குடும்பப் பின்னணிகளும் வெளியாகி, இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி, மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற வந்தவருக்கு நடந்த சோகப்பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவருகிறது. கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரை த்தவிர, மற்றவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, DNA சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்தான், தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வந்தவருக்கு நேர்ந்த துயரம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுன், தனது மனைவி பாரதி பென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். சிகிச்சையில் இருந்த பாரதி பென், ஏழு நாட்களுக்கு முன்புதான் உயிரிழந்துள்ளார். “நான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள ஆற்றில் கரைக்கவேண்டும்” என இறப்பதற்கு முன் தனது கணவரிடம் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால், மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற
இந்தியாவுக்கு செல்வதாக தனது 8 வயது மற்றும் 4 வயது மகள்களிடம் சொல்லிவிட்டு லண்டனிலிருந்து கிளம்பியிருக்கிறார், அர்ஜுன்.
மனைவியின் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சியில், கனத்த இதயத்தோடு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப, ஏர் இந்தியா விமானத்தில் ஏறியிருக்கிறார், அர்ஜுன். இந்தநிலையில்தான், இப்படியொரு கோர விபத்தில் சிக்கி உயிரிழந்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 நாட்களுக்கு முன்புதான், அம்மா பாரதி பென் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது அஸ்தியை கரைக்கச்சென்ற அப்பாவும் விமான விபத்தில் உயிரிழந்ததால், 4 வயது மற்றும் 8 வயது மகள்கள் துடிதுடித்துப் போயிருக்கிறார்கள். அப்பாவின் வருகைக்காக காத்திருந்து, அவர் இனி வரமாட்டார் என்பது தெரியவர, ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாமல் பரிதவித்த நிலையில் இருந்துகொண்டிருப்பது, ஒவ்வொரு இதயங்களையும் கனக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu