BIG STORIES
அவனுக்கு புடிச்ச பெண்ண கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. எங்க சொத்து மட்டும் வேணுமா? வீட்டு பெரியவர்களின் ஆதங்கம்
Jun 15, 2025 01:09 AM
523
அவனுக்கு புடிச்ச பெண்ண கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. எங்க சொத்து மட்டும் வேணுமா?
சென்னையில் மகனுக்கும் மருமகளுக்கும் பயந்து பென்சன் புத்தகத்தை ஒழித்து வைக்கும் நிலையில் இருப்பதாக ஓய்வு பெற்ற அரசு கருவூல ஊழியர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். முதியோர் , இளையோருக்கு இடையேயான உள்ள தற்கால உறவு முறை குறித்து புள்ளி விவரத்துடன் விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
ஹெல்ப் ஏஜ் நிறுவனம் சார்பில் முதியோர் - இளையவர்கள் இடையே ஏற்படும் சூழல் குறித்து விளக்க நிகழ்வு சென்னை நந்தனத்தில் நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட முதியவர்களும், இளைய தலைமுறையினரும் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்
2025 ம் ஆண்டு இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை, மதுரை, டெல்லி, மும்பை, கொல்கொத்தா,
பெங்களூரு, ஹைதராபாத், அஹமதாபாத், கான்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய 10 நகரங்களில் வசிக்கின்ற முதியோர்கள் குடும்பத்தினரால் அதிகம் அவமதிக்கப்படுபவதாக ஹெல்ப் ஏஜ் நடத்திய புள்ளி விவர அறிக்கையில் தெரியவந்துள்ளது
கடந்த 20 ஆண்டாக முதியோர் - இளையோர் இடையே உள்ள பிணைப்பு பற்றி ஆய்வில் அதிர வைக்கும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது. தனிமையில் இருக்கும் முதியவர்கள் 56 சதவீதமாகவும், மற்றவரை நாடி இருக்கும் முதியோர்கள் 48 சதவீதத்தினர் என்றும்., 47 சதவீதத்தினர் தன்னம் தனியாகவும், அதிகப்படியாக 54 சதவீத முதியோர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான கனவுகளோடு எதிர்மறை உணர்வுகளோடு வாழ்ந்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார் ஹெல்ப் ஏஜ் அமைப்பின் தமிழ்நாடு இயக்குநர் எட்வின்
பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிக்காட்டியாக இருந்த முதியவர்கள்., வளர்த்த பிள்ளைகள் பேசுவார்களா, மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் வீட்டில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள்., பிள்ளைகள், பேரன், பேத்திகள் என அவரவர் ஸ்மார்ட் போன் பயன் படுத்துவதில் 41சதவீதம் நேரத்தை செலவிடுகிறார்கள் எனவும்., 13 சதவீதம் பேர் இண்டர்நெட், கம்பியூட்டர், சோசியல் மீடியா, டிஜிட்டல் போன்ற பயன்பாட்டில் தான் நேரத்தை செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது
முதியோர்கள், தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மீது, வெறுப்பு மற்றும் மன வருத்தத்தை உணர்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் , பெற்ற மகன், மருமகளுக்கு சொத்துகள் தான் குறிக்கோள் என்று கூறிய ஓய்வு பெற்ற அரசு கரூவூல கணக்காளர் ஆனந்தகிருஷ்ணன் பென்சன் புத்தகம் இருக்கும் இடம் சீக்ரெட், அது எனக்கும் மனைவிக்கும் மட்டுமே தெரியும் என மனம் நொந்து பேசினார்
நோய்க்கும் பார்த்து, பேய்க்கும் பார்த்து, கையை பிடித்து எழுத வைத்து, எழுத்து கூட்டி படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களின் கண்ணீரை, துடைக்க வேண்டியது அவர்களது பிள்ளைகளின் கடமை. முதியோர் இல்லங்களில் தங்கி இருக்கும் ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையும்... ஒரு கண்ணீர் கதை..! இன்று விதைக்கும் விதை, நாளை நமக்கானது என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu