BIG STORIES
தேனி பொண்ணு.. திருவள்ளூர் பையன்.. ஜெகன் மூர்த்தி எங்கே..? காரை கொடுத்ததால் தவிக்கும் ஏடிஜிபி
Jun 15, 2025 01:18 AM
279
தேனி பொண்ணு.. திருவள்ளூர் பையன்.. ஜெகன் மூர்த்தி எங்கே..?
காதல் புனிதமானது.. காதல் உணர்வுப்பூர்வமானது... காதல் தெய்வீகமானது.. அதெல்லாம் இல்லை காதல் வயசுக்கோளாறு அவ்வளவு தான்.. இப்படி காதலுக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்தாலும், இன்ஸ்டா காதல் ஜோடியை பிரிக்க களமிறங்கியதால் தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியின் தலைவரும்... தமிழக காவல்துரையில் உள்ள முக்கியமான காவல் அதிகாரியும் போலீசுக்கு ப்யந்து நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த கலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய்ஸ்ரீ என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இருவரும் வேறு வேறு ஜாதி என்று கூறப்படுகின்றது. இதனால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வியஸ்ரீ குடும்பத்தினர் வசதி படைத்தவர் மட்டுமில்லாமல் அதிகார வர்க்கத்தினருடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் காதலனை தேடி வந்த விஜயஸ்ரீ மே மாதம் 21 ந்தேதி காதலன் தனுஷை பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பது தற்போதுவரை தெரியாத நிலையில், பெண் வீட்டார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏடிஜிபி ஒருவரது அலுவல் பணிக்கு பயன்படுத்தகூடிய வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற மர்மக்கும்பல் ஒன்று, காதலனின் வீட்டிற்கு சென்று காதல் ஜோடி எங்கே என்று கேட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்த நிலையில், தனுஷின் 17 தம்பியை தாக்கி ஏடிஜிபியின் காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றதாகவும், பெண்ணை கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு சிறுவனை அழைத்துச்செல்ல கூறியுள்ளனர். இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் வாகனத்தில் சிறுவன் கடத்தல் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடத்தப்பட்ட சிறுவனை சில கிலோ மீட்டர் தூரத்தில் கடத்தல் கும்பல் இறக்கி விட்டு தப்பியது. இந்த புகார் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் காவல் அதிகாரின் கார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வடக்கு மண்டல் ஐஜி அஸ்ராகார்க் உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி தமிழரசி, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் கடத்தல் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, தேனியை சேர்ந்த இளம் பெண்ணின் உறவினர்கள் காவல்துறையில் ஏ.டி.ஜி.பி ரேங்கில் இருக்கும் காவல் உயர் அதிகாரியிடம் காதல் விவகாரத்தை எடுத்துக்கூறி தங்கள் பெண்ணை மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அந்த காவல் அதிகாரியின் சிபாரிசின் பேரில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை மூர்த்தி எம்.எல்.ஏவை பெண்ணின் குடும்பத்தினர் சந்தித்ததாகவும், பூவை மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் கடத்தல் சம்பவம் நடந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து ஆண்டரசன்பேட்டையில் உள்ள பூவை மூர்த்தியின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற நிலையில் அவரது ஆதரவாளர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு ஒரு அரசியல் கட்சியின் தலைவரை விசாரிக்க 500 போலீசார் எதற்கு என்று கேட்டு போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு வீட்டின் முன்பு மறித்து நின்ற ஆதரவாளர்களை அப்புறப்படுத்திய போலீசார் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தனர். விசாரணை அதிகாரியை மட்டுமே உள்ளே அனுமதிக்க்ம முடியும் என்று தெரிவித்ததால் சுமார் 5 மணி நேர முயற்சிக்கு பின்னர் டி.எஸ்.பி தமிழரசி காவல் ஆய்வாளர் அய்யப்பன் ஆகிய இருவரும் உள்ளே சென்றனர்
அந்த வீட்டில் அவர் இல்லை என்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் வெளியூர் சென்றிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும் இதனை நம்பாமல் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக இரு காவல் அதிகாரிகளும் 1 மணி நேரம் தேடியதாக கூறப்படுகின்றது. பூவை மூர்த்தி போலீசார் கைகளில் சிக்காத நிலையில், அவர் தலைமரைவானதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரை வீட்டில் இருந்து தப்பிச்செல்ல வைப்பதற்காகவே போலீசாரை அவரது ஆதரவாளர்கள் மறித்து நின்ரதாக கூரப்படுகின்றது. அய்மார் 6 மணி நேரம் பூட்டிய வீட்டு முன்பு நின்று போலீசார் கெடுபிடி காட்டிய நிலையில் அவர்களது கையில் சிக்காமல் பூவை மூர்த்தி எங்கே சென்றார் என்பது போலீசாருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகின்றது
இதற்கிடையே கடத்தல் வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண்மணி, தான் ஜெகன் மூர்த்தி மீது புகார் அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்
இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவரது ஆதரவாளர்கள் , காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக தாங்கள் தாழ்த்தபட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போலீசாரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். காதல் ஜோடியையும் காணவில்லை, காதல் ஜோடியை வரவழைக்க சிறுவனை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட எம்.எல்.ஏவையும் காணவில்லை என்பதால் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அந்த காவல் உயர் அதிகாரி யார் என்பது மர்மமாக உள்ளது.
ஒரு இன்ஸ்டாகிராம் காதல் பார்த்த பார்வை ஒரு அரசியல் கட்சி தலைவரை தலைமறைவாக வைத்துள்ளது என்று சுட்டிக்காட்டும் நிலையில் அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேட தொடங்கி இருக்கிறார்கள்.
சிபாரிசுக்காக செய்தாலும் ... சீரியசாக செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu