RECENT NEWS

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

Jun 15, 2025

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

Jun 15, 2025

BIG STORIES

பா.ம.க பிரமுகர் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன..? பதிலடியாக போலீசாரும் சுட்டனர்

Jun 15, 2025 06:41 AM

53

பா.ம.க பிரமுகர் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன..? பதிலடியாக போலீசாரும் சுட்டனர்

பா.ம.க பிரமுகர் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன..? பதிலடியாக போலீசாரும் சுட்டனர்

அரக்கோணம் அருகே பாமக பிரமுகர் பைக்கில் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் பாமக கட்சியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 11 தேதி இரவு அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சக்கரவர்த்தி இருசக்கரவாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியான நிலையில் அவரது உடலில் சந்தேகத்துக்கு இடமான காயங்கள் இருந்ததால் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

அரக்கோணம் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு சக்கரவர்த்தி நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

வழக்கில் தொடர்புடைய பிரபு , மாதவன் ஆகிய இருவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த முகுந்தராயபுரம் அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்ட பிரபு தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது

இதனை எடுத்து சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தனது துப்பாக்கியால், பிரபுவின் இடது கால் முட்டியில் சுட்டு பிடித்தார். மேலும் காயம் அடைய பிரபுவை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் 8ந்தேதி ரெண்டாடி பகுதியை சேர்ந்த பிரபுவின் கூட்டாளியான பிரபல ரவுடி ஸ்ரீனிவாசன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சக்கரவர்த்தி ஜாமீனில் வெளியே கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் சக்ரவர்த்தி மீது பிரபு ஆத்திரத்தில் இருந்துள்ளான் அந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில் சக்கரவர்த்தியை, கடந்த சில தினங்களாக பிரபு கூட்டாளியான துரைமுருகனுடன் சேர்ந்து வேவு பார்த்ததாக கூறப்படுகின்ரது.

சக்கரவர்த்தியை கொலை செய்ய போவதாக கூறியதும் கூட்டாளி துரைமுருகன் வர மறுத்து விட்டதால் மற்றொரு கூட்டாளி மாதவனுடன் சேர்ந்து இந்த கொலை செய பிரபு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சக்கரவர்த்தியை சுட்டுக் கொன்றதாக பிரபு வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

மாதவன் கைது செய்யப்பட்ட நிலையில் , குண்டு காயம் அடைந்த நிலையில் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபு மேல் சிகிச்சைக்காக தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ராசி இல்லாத டீமா..? வாயை அடைத்த  பவுமா கிழித்து தொங்கவிட்ட ஹெய்டன்...

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies