RECENT NEWS

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

Jun 16, 2025

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

Jun 16, 2025

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர் வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

Jun 16, 2025 01:19 AM

137

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர் வசமாக சிக்கியது எப்படி..?

மதுரை அருகே முதியவரை பேருந்தில் ஏற்றாமல் சென்றது குறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்ட கடைக்காரரை, அரசு பேருந்து ஓட்டுநர் நேரடியாக சென்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை உள்ளது. இந்த கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பதிவாகும் அன்றாட நிகழ்வுகளை கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று 28 ஆம் எண் கொண்ட அரசு பேருந்தில் ஏறுவதற்கு ஒரு முதியவர் கையில் பொருட்களோடு, ஓடி வந்தபோது அரசு பேருந்து ஓட்டுநர் வாகனத்தை அவசரமாக எடுத்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்த கடையின் உரிமையாளர், பேருந்தில் ஓடி வந்து ஏறுபவர்கள் மட்டும் தான் பயணிக்க முடியுமா? பயணிகள் எல்லாரும் ஓட்டப் பந்தய வீரர்களா? என கிண்டலடித்து பதிவிட்டார்.

இந்த வீடியோவை பார்த்த அந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், அந்தக் கடையை தேடி வந்து, கடை உரிமையாளரிடம், ஏன் இது மாதிரி வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டாய்? என விரட்டியதாக கூறப்படுகிறது

அதுமட்டுமில்லாமல், தவளை தன் வாயால் கெடும் என்பது போல தான் போதையில் இருப்பதாகவும் அந்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார். வேலை நேரத்தில் எப்படி? என கடையின் உரிமையாளர் கேட்டதற்கு "போதைய போட்டு தான் வண்டியே ஓட்டுவேன்" என திமிராக கூறியதோடு "உசுர விட்டு போயிராத" என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

ஆனால் இந்த காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்பது வீராப்பு வசனம் பேசிய அந்த அரை போதை ஓட்டுனருக்கு தெரியவில்லை.

அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றாமல் செல்வது, அதனை தட்டிக் கேட்டால் போதையில் தான் வாகனம் ஓட்டுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுவது என அராஜகத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மிரட்டிய காட்சிகளுடன் மற்றொரு வீடியோ வைரலாக தொடங்கி இருக்கிறது.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies