முகப்பு
முக்கோண காதல் விவகாரம்.. மூச்சை நிறுத்திய EX. காதலன்! அதிர்ந்து போன ஊர்மக்கள்..
Jun 16, 2025 01:28 PM
33
காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாத இளைஞர், அவரின் வருகால கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாவட்டம் குல்லஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன். வங்கியில் வேலை பார்த்துவந்த இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதைதொடர்ந்து இருவீட்டாரிடன் சம்மதத்துடன் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி தனது தோட்டத்தில் தர்ஷன் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து நெலமங்களா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தர்ஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இதுத்தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நெலமங்களாவை சேர்ந்த வேணுகோபால் என்பவரை போலிசார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ வேணுகோபால் சாலையோரத்தில் உணவு கடை ஒன்றை நடத்திவருபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரும், தர்ஷனுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தின, அந்தப்பெண்ணை கண்டித்து வேணுகோபாலுடனான காதலை கைவிடுமாறு கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து தர்ஷனுக்கு, அப்பெண்ணை திருமணம் பேசி முடித்துள்ளனர். இதன்காரணமாக அந்த இளம்பெண், வேணுகோபாலுடன் பேசுவதை தவிர்த்துவந்துள்ளார். இருப்பினும் வேணுகோபால் பலமுறை அந்தப்பெண்ணிடம் பேச தொடர்பு கொண்டும் முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து, தர்ஷனுடன் அந்தப்பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டதை அறிந்த வேணுகோபால், ஆத்திரத்தில் தர்ஷனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 5-ம் தேதி சமாதானம் பேசலாம் வேண்டும் என தர்ஷனை, வேணுகோபால் அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்ஷன் தனது வருங்கால மனைவியிடம் கூறியிருக்கிறார், ஆனால் அதற்கு அந்த பெண் வேணுகோபால் இடத்துக்கு எல்லாம் போக வேண்டாம், என தடுத்திருக்கிறார்.
இதனையடுத்து வேணுகோபாலை தனது தோட்டத்துக்கு வருமாறு தர்ஷன் அழைத்துள்ளனர். அப்போது தோட்டத்துக்கு வந்த வேணுகோபால், மீண்டும் தர்ஷனுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தர்ஷனை 20 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தர்ஷன் நிகழ்விடத்திலையே உயிரிழந்தார்.
இந்த நிலையில், தர்ஷனை கொன்று விட்டு தலைமறைவாக இருப்பதற்காக திருப்பதிக்கு சென்ற வேணுகோபால், அங்கு மொட்டை அடித்து விட்டு, மண்டியாவுக்கு வந்து ஏதும் தெரியாததுபோல் இருந்துவந்துள்ளார். பின்னர் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசாரிடம் வேணுக்கோபல் சிக்கி
யுள்ளார். அவரை கைதுசெய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாத இளைஞர், அவரின் வருகால கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu