முகப்பு
குணா குகையில் Robbery குரங்குகள் பணப்பை பறிப்பு..! உஷார் சுற்றுலா பயணிகளே
Jun 16, 2025 01:53 PM
13
மஞ்சுமோல் பாய்ஸ் திரைப்படம் வெளியான நாள் முதலே, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள்குணா குகை பகுதியை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
இந்த சுற்றுலா தலத்தில் அதிகமாக குரங்குகள் உள்ள நிலையில், கடந்த சில மாதாங்களாகவே சுற்றுலாப்பயணிகள் கொண்டு வரும் உணவு பொருட்களையும்,கையில் கொண்டு வரும் கைப்பைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் கொண்டு வந்த கைப்பைகளை 5 முறை பறித்து சென்றது, குறிப்பாக கேரளா சுற்றுலாப்பயணியின் பையில் இருந்த மொபைலை பறித்து சென்றதை கேரளா மாநில பயணிகள் போராடி குரங்கினை விரட்டியதில் கீழே விட்டு சென்றது
இது போன்று மற்றொரு சுற்றுலாப்பயணியின் செல்போனை பறித்து சென்ற காட்சிகளும் வீடியோ வைரலானது
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணியின் கைப்பையை பறித்து மரத்தின் உச்சிக்கு சென்று,பையில் இருந்து அழகு சாதன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கீழே போட்டது
இறுதியாக 100 ரூபாய் நோட்டை மரத்தில் விட்டு சென்றதை சுற்றுலாப்பயணிகள் குச்சி மூலம் கீழே தட்டி விட்டு எடுத்து சென்றனர்
இதனை தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து வருகை புரிந்த சுற்றுலாப்பயணியின் கைப்பையை பறித்து சென்று அதனுள் இருந்த 500 ரூபாய் பணக் கட்டினை எடுத்து மரத்தின் உச்சிக்கு சென்று ஒவ்வொரு 500 ரூபாய் நோட்டாக ஒன்றன் பின் ஒன்றாக கீழே போட்ட சம்பவம் பேசு பொருளானது
சம்பந்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள் சேகரித்து தங்கள் பணத்தை மீட்டனர், மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது
இது குறித்து சுற்றுலாப்பயணிகள் அங்கு உள்ள தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்களிடம் மட்டும் புகார் தெரிவிப்பதால் வனத்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்,
இப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவு பொருட்களை சிறுவர்கள்,பெண்கள் உள்ளிட்டோர் கையில் கொண்டு வரும் போது பறித்து செல்வதால் சில நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் பயந்து ஓடி செல்கின்றனர், சிலர் அங்குள்ள மர வேர்களில் தட்டி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இதனை வனத்துறை கவனம் செலுத்தி மனித விலங்கு
மோதல் ஏற்பட்டுவதற்கு முன், இப்பகுதியில் உள்ள குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி சுற்றுலாப்பயணிகளை காக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் குரங்குகளை பார்த்ததும் கையில் இருக்கும் உணவு பொருளை போட்டு பழக்கம் காட்டிய சுற்றுலா பயணிகளின் விபரீத விளையாட்டால், தற்போது அனைத்து குரங்குகளும் தாங்களாகவே உணவு தேடி கைப்பையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக தெரிவித்த வனத்துறையினர், குணா குகை பகுதிக்கு உணவு பொருட்களை எடுத்து வருவதை தவிர்த்து தாங்கள் கொண்டுவரும் கைப்பையை கவனத்துடன் கையில் வைத்திருக்க வேண்டியது சுற்றுலா பயணிகளின் பொறுப்பு என்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu