முகப்பு
"அந்த மாதிரி தொழில்" யார் அந்த ஏடிஜிபி சார் ?.. தர்ம அடி வாங்கிய பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்..
Jun 16, 2025 01:56 PM
43
நண்பர்களுடன் வீக் எண்ட் பார்ட்டியில் ஜில் செய்ய சென்ற போது, நண்பர் ஒருவரின் தங்கைக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக குறுந்தகவல் அனுப்பியதாக கையும் களவுமாக சிக்கி தர்ம அடி வாங்கியவர் இன்ஸ்டா பிரபலம் ஸ்ரீ விஷ்ணு.
இந்நிலையில் அவர் சமீபத்திய நேர்காணலில் கூறிய பல தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாவில் டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுவது, பொருட்களுக்கு மார்க்கெட்டிங் செய்வது என இன்ஸ்டா பிரபலமாக வலம் வந்தவர் விஷ்ணு. சில ஆண்டுகளுக்கு முன்பு அஷ்மிதா என்பவரை காதலித்ததாகவும் அந்த காலகட்டத்தில் அஷ்மிதா கர்ப்பமானதால் இருவரும் திருமணம் செய்ததாக விஷ்ணு தெரிவித்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்த நிலையில், மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தனது நண்பர்களோடு பார்ட்டி செய்ய போன விஷ்ணுவிற்கு அங்கிருந்த நண்பரின் தங்கை ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்பு அவருடன் அந்த மாதிரி சேட்டிங் செய்ததாக ஒப்புக்கொண்ட விஷ்ணு, அந்த பெண்ணும் நண்பர்களும் தன்னை பொறி வைத்து இதில் மாட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தன்னை அவர்கள் அடித்து துன்புறுத்தி வீடியோவில் பேச வைத்துவிட்டு, மனைவி அஷ்மிதாவிடம் போன் செய்து தெரிவித்ததாகவும், பின்பு தனது போனை அவர்கள் பிடுங்கி வைத்ததாவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டா ஐ.டியில் இருந்தே அவர்கள் எடுத்த வைத்த வீடியோ பார்ட் 1 , பார்ட் 2 என பதிவிடப்பட்டதாகவும் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது , பார்ட் 2 வீடியோவை பதிவிட்டதே உங்கள் மனைவி தான் என போலீசார் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இது அனைத்திற்கும் மூல காரணமே அஷ்மிதா என்பதே பின்பு தான் தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
அப்போது தொகுப்பாளர், அந்த நண்பரின் தங்கை பெண் விருப்பம் தெரிவித்தால், நீங்கள் அப்படி இருக்க சம்மதம் தெரிவித்திருப்பீர்களா? என கேட்டதற்கு நிச்சயம் அப்படி இருந்துருப்பேன் என வில்லங்கமாக விஷ்ணு பதில் அளித்துள்ளார்.
இது மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா? என கேட்டதற்கு திருமணத்திற்கு முன்பே அஷ்மிதாவின் சம்மதத்தோடு மலேசியாவில் அரேபியன் மாடல் ஒருவரோடு அந்த மாதிரி இருந்ததாக கூறியிருக்கிறார் விஷ்ணு.
மேலும் தன்னை தாக்கிய நண்பர்கள் மீதும், வீடியோவை பதிவிட்ட மனைவி மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் மனைவி மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, அதற்கு காரணம் எதிர் வீட்டில் இருக்கும் ஏடிஜிபிக்கும் தனது மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாகவும், அதனால் அவரது பலத்தை பயன்படுத்தி வழக்கும் பதிவு செய்யாமல் பார்த்துக் கொள்வதாக விஷ்ணு புது குண்டை தூக்கிக் போட்டுள்ளார். அந்த ஏடிஜிபி தன்னிடமே அஷ்மிதா மீது புகார் கொடுக்க வேண்டாம் என கெஞ்சியதாவும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu