BIG STORIES
போலீசிடம் தப்பி வீடு வீடாக தாவிய டிரங் அண்ட் மங்கன்..! டுவிஸ்ட் வைத்த சம்பவம்
Jun 29, 2025 01:38 AM
157
மாயி படத்தில் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு பேருந்தை மறித்து வம்பு செய்யும் வடிவேலு போல நிஜத்தில் மனைவி சண்டையிட்டு சென்றதால் கையில் கட்டையுடன் பேருந்தையும் லாரியையும் மடக்கி தாக்கிய அரைபாடி போதையன் ராயப்பாடி ராஜா இவர் தான்..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ராயப்பாடியை சேர்ந்த ராஜா என்ற இளைஞர் கையில் கட்டையுடன் சாலையில் செல்வோர் வாகனங்களைச் மடக்கி தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.
கத்தியை எடுத்து வந்து பொதுமக்களை அறுச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பெரியபாளையம் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது
அதன்பேரில் அங்கு வந்த பெரியபாளையம் காவல் துறையினர் இந்த இளைஞரை பிடிக்க முற்பட்டபோது கத்தியை காட்டி காவல் துறையினரை அச்சுறுத்திய ராஜா, போலீசார் விரட்டியதால், புதருக்குள் ஓடிச்சென்று ஒழிந்தார்
போலீசார் அவரை விரட்டிப்பிடிக்க முயன்றதும் புதருக்குள் இருந்து வெளியே வந்து சுவற்றில் தொற்றி ஒரு வீட்டின் மீது ஏறினார். பின்னர் அருகில் இருந்த ஒரு கட்டடத்தின் மீது ஏறி தப்பிச் சென்றார்.
போலீசாரும் விடாமல் அவரை பிடிக்க வீடு மீது ஏறினர். அதற்குள்ளாக மரம் விட்டு மரம் தாவும் மங்கி போல அடுத்த வீட்டு மாடிக்கு தாவிக்குதித்தார்.
பின்னர் ஒரு வீட்டின் முன் பக்கம் உள்ள கூலிங் சீட் மீது குதித்து தப்பிக்க முயன்றவரை போலீசார் சுற்றிவளைத்தனர். அந்த வீட்டின் மின் இணைப்பை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்ட ராஜா, மறுபடியும் ஒவ்வொரு வீடாக தாவி சென்றார்
அங்கிருந்து குதித்து ஒரு புதரில் ஒளிந்து கொண்டு ஆட்டம் கட்டினார். இதனையடுத்து காவல் துறையினர் மெல்ல அவரிடம் பேச்சு கொடுத்து அவரை பிடிக்கும் முயற்சி செய்த போது அவர் பிடி கொடுக்காமல் தப்பி ஓட முயன்றார். அதற்குள்ளாக அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரை அலேக்காக தூக்கி ச்சென்றனர்
ஆட்டோவில் ஏற்றி அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி கோபித்து சென்றதால் ரகளையில் ஈடுபட்டதாக ராயப்பாடி ராஜா போலீசாரிடம் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார், தினமும் மது மற்றும் கஞ்சா போதையில் மனைவியிடம் தகராறு செய்ததால் அவர் ஒரு வாரத்துக்கு முன்பு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கோரி தான் சாலையில் வருவோர் போவரை மிரட்டி தாக்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், பொது மக்களை அச்சுறுத்தல், ஆபாசமாக பேசுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதை இளைஞரின் அட்டகாசத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராஜா மீது பெரியபாளையம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கும், அடிதடி வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மதுவுடன் கஞ்சாவும் புகைத்திருந்ததால் இது போல ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் கொக்கைன் பயன்படுத்திய நடிகர்கள் எல்லாம் கைது செய்யப்படும் நிலையில் இது போன்ற கஞ்சா குடிக்கிகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதே நேரத்தில் மதுக்கடைகளையும் படிபடியாக குறைக்க தவறினால் ராயப்பாடி ராஜாவை போன்ற போதையர்களின் அட்டகாசத்தை தடுக்க இயலாமல் போய்விடும் என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
விபரீத போதையில் செய்தாலும்... பொல்லாத பாதையில் சென்றாலும்... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu